செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நானே பாண்டுரங்கன்.. கால்களை அமுக்கி விடு ஸ்ரீதேவி.. பூதேவி..! இப்படியும் ஏமாறுவார்களா ?

Jun 22, 2023 08:04:09 AM

மக்களை காக்க 'மனித உருவில் வந்த கடவுள்' என தன்னைத் தானே கூறிக்கொண்டு பேச முடியாதவர்களை பேச வைப்பதாகவும், நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பதாகவும் கூறி நாடகமாடிய தமிழகத்தைச் சேர்ந்த போலி சாமியார் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

நானே மகா விஷ்ணு... நானே பாண்டுரங்கன்... எனக் கூறிக் கொண்டு மகாவிஷ்ணு வேடத்திலேயே, தெலுங்கானா பக்தர்களுக்கு பால்கோவா கொடுத்ததாக போலீசாரிடம் சிக்கி உள்ள செஞ்சியை சேர்ந்த போலி சாமியாரான சந்தோஷ் குமார் இவர் தான்..!

திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமாருக்கு இரு மனைவிகளும், ஒரு மகனும் உள்ளனர். தெலங்கானாவில் தங்கியிருந்த இவர் தன்னை மகா விஷ்ணுவாகவும், தனது இரு மனைவிகளில் ஒருவரை ஸ்ரீதேவி எனவும், மற்றொருவரை பூதேவி எனவும் அறிவித்துக் கொண்டார்.

மக்களை காக்க மனித உருவில் வந்திருப்பதாக கூறி 5 தலை நாகமான, ஆதிசேசன் பாம்பு போன்று கட்டில் அமைத்து, அதில் ஏறி அனந்த சயனத்தில் படுத்துக் கொண்டு தனது இரு மனைவிகளையும் கால் அமுக்கி விட வைத்து பக்தர்களை ஏமாற்றிய சந்தோஷ், திருப்பதி ஏழுமலையான் வேடமணிந்து 'நான் தான் கடவுள்' எனக்கூறி பிரச்சாரம் செய்து வந்ததாக கூறபடுகின்றது

இது மட்டுமின்றி, தன்னை காண வரும் பக்தர்களுக்கு தன்னால் சரியாக கலந்துரையாட முடியவில்லை என்று கூறி அம்மாநிலத்தில் அமைந்துள்ள பாலமூறு மாவட்ட உமித்யாலா கிராமத்தின் தலைவர் சத்தியநாராயணா என்பவரிடம், தனக்கு என்று தனியாக இடம் ஒதுக்குமாறு கேட்டுள்ளார். அதன்பேரில், சத்யநாராயணாவும் விவசாய நிலத்திற்கு மத்தியிலுள்ள வீட்டை இலவசமாக வழங்கினார்.

சுவாமி-ஜியின் மகிமையால் வாய் பேச முடியாத பலர் பேசவும், நடக்க முடியாதவர்கள் நடக்கவும் முடிந்தது என சுற்றுவட்டாரக் கிராம மக்களிடையே தகவல் தீயாய் பரவியதை நம்பி, சந்தோஷ் சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்றனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில் சந்தோஷ் ஒரு போலி சாமியார் என்பது தெரியவந்ததையடுத்து சந்தோஷை கைது செய்தனர்

அவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது பக்தகோடிகள் பாண்டு ரங்கா என்று கோஷமிட்ட நிலையில் , அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement