செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

யூடியூப்பில் வீடியோ பார்த்து சாவை தேடிச்சென்ற இளைஞர்கள்.. ஆட்கொல்லி அருவி..! தோழி கதறல்.. முகம் சிதைந்து மீட்கப்பட்ட இரு உடல்கள்..!

Jun 17, 2023 07:12:51 AM

யூடியூப் பார்த்து ஆளில்லா அருவிக்கு தோழியை அழைத்துச்சென்ற 3 இளைஞர்கள் , அந்த பெண்ணின் முன்பே தடாகத்தில் மூழ்கிய நிலையில் ஒருவர் மீட்கப்பட, இருவர் நீரில் மூழ்கி பலியான விபரீதம் அரங்கேறி உள்ளது. நீரில் மூழ்கியவர்களின் முகங்கள் சிதைந்து காணப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..3

கழுகுப்பார்வையில் உற்றுப்பார்த்தால் தலை சுற்றும் வண்ணம் ஆர்ப்பரித்துக் கொட்டும் இந்த அருவியின் தடாகத்தில் மூழ்கித்தான் இருவர் உயிரை பறி கொடுத்துள்ளனர்..!

ஊரே உஷ்னத்தை தீர்க்க ஊட்டியைத்தேடிச்செல்ல... ஊட்டியை சேர்ந்த இளைஞர்களான நிஷாந்த் குமார், தமீம், கோவையை சேர்ந்த ஜெஸ்வின் ஆகிய 3 இளைஞர்களும் ஆளில்லா அருவியை யூடியூப்பில் தேடியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சமலை, பெரிய மங்களம் அருவி குறித்து அறிந்து கொண்ட அவர்கள் மூவரும் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த 23 வயது தோழியை அழைத்துக் கொண்டு காரில் அங்கு சென்றதாக கூறப்படுகின்றது.

வெயில் காலம் என்பதால் அந்த அருவியில் தண்ணீர் கொட்டாமல் , தடாகத்தில் மட்டும் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. கூட்டாளிகளில் இருவர் தோழியின் முன்பு கெத்து காட்டும் விதமாக குளிப்பதற்காக தடாகத்திற்குள்ளே குதித்து உள்ளனர். சில வினாடிகளில் தடாகத்தின் ஆழம் தெரியாமல் தத்தளித்துள்ளனர். அவர்களை காப்பாற்ற கைகொடுத்த நிஷாந்த்குமாரும் தடாகத்திற்குள் தவறி விழுந்தார். அடுத்தடுத்து விழுந்த மூன்று பேரும் தத்தளிப்பதை கண்டு பதறிபோன அவர்களது தோழி காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த விவசாயிகள் தடாகத்திற்குள் குதித்து நிஷாந்த்குமாரை மீட்டனர். அதற்குள்ளாக இருவர் முழுவதுமாக நீரில் மூழ்கிவிட்டதாக கூறப்படுகின்றது

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மீட்கப்பட்ட நிஷாந்த்குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்புத்துறையினர் நீருக்குள் இறங்கி தடாகத்தின் அடியில் தேடினர்.

பாறை இடுக்கில் சிக்கிக் கிடந்த தமீம் மற்றும் ஜெஸ்வின் ஆகிய இருவரது சடலங்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். இருவரது சடலங்களிலும் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. இது தொடர்பாக விவரித்த வனத்துறையினர் தடாகத்தின் அடிப்பகுதியில் உள்ள மீன்கள் மற்றும் நண்டுகள் இவர்களின் முகத்தை கடித்து சேதப்படுத்தி இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தம்மம்பட்டி போலீசார் வழகுப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தடாகத்தில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர் நிஷாந்த்குமாருக்கு திருச்சி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

திரில்லாக...டிரெக்கிங் செல்வதாக கூறிக் கொண்டு புதிய நீர் வீழ்ச்சிகளை நாடிச்செல்வோர் தகுந்த முன் எச்சரிக்கை இல்லாமல் நீரில் இறங்கினால் என்னமாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement