செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பிரதமரை மக்கள் விரும்புகின்றனர்.. தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும்.. முள்ளுமேல இருக்கற மாதிரி இருக்கு.. மதுரை ஆதீனம் சொல்கிறார்..!

Jun 17, 2023 07:13:06 AM

மதுரை ஆதீனமாக இருப்பது முட்கள் மீது இருப்பது போல் உள்ளதாக கூறியுள்ள ஞானசம்பந்த தேசிக பரமாச்சரிய சுவாமிகள்,அரசியல்வாதிகளுக்கு வாழ்த்துச் சொல்லி ஆசீர்வதிப்பேனே தவிர, பரப்புரைக்கு போக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்...

மதுரை ஆதீன மடத்தில், 293ஆவது மகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார்... கலகலப்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், காஞ்சிபுரம் தொடங்கி மதுரை வரையில், ஒவ்வொரு மடத்திலும் தாம் இருந்தபோது, ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி, கோவில் மற்றும் ஆதீன நிலங்களை மீட்டதாக விவரித்தார். இதற்காக, ஆக்கிரமிப்பாளர்களிடம், வசவுகளை வாங்கி கட்டிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டாலும், ஒருபோதும் எனது பணியை கைவிட மாட்டேன் என்றார். 

பிரதமர் நரேந்திர மோடியிடம் காணப்படும் தமிழ் உணர்வு, அதுகுறித்தான உந்துதலால், 3ஆவது முறையாக பிரதமராக வரலாம் என்றார். இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்ததை பாராட்ட வேண்டும் எனும் நோக்கில் தான், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவின்போது, பிரதமரிடம் செங்கோல் கொடுத்ததாக, மதுரை ஆதீனம் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளுக்கு வாழ்த்துச் சொல்லி ஆசீர்வதிப்பேனே தவிர, பரப்புரைக்கு போக மாட்டேன் என்றார். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும், கருத்துச்சொன்னால் ரசிகர்கள் பகைத்துக் கொள்வார்கள் எனவும் மதுரை ஆதீனம் கூறினார். 

மதுரை ஆதீனமாக பதவிக்கு வந்து  2 ஆண்டுகள் ஆவது குறித்த கேள்விக்கு, காஞ்சிபுரத்தில் சுதந்திரமாக நிம்மதியாக இருந்த நிலையில், தற்போது முள் மீது இருப்பது போல் உள்ளதாக மகா சன்னிதானம் தெரிவித்தார். இருப்பினும், ஆன்மீகப் பணியோடு, ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகளும் தொடரும் என உறுதிபட கூறினார்....


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement