செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஊதுடா ஊது.. போக்குவரத்து போலீசும் - போதை ஆசாமியும்! பிரீத் அனலைசரில் "பீப்பி" வாசிப்பு....

Jun 16, 2023 07:21:16 PM

மதுரையில் மது போதையில் பைக்கை ஓட்டிச் சென்று கார் மீது மோதிய ஆசாமி ஒருவர், ஆல்கஹால் அளவைக் கண்டறியும் 'ப்ரீத் அனலைசர்' கருவியில் ஊதச் சொல்லிக் கேட்டபோது கருவி மீது விரல்களால் தாளமிட்டு நாதஸ்வரம் வாசிப்பது போல் செய்து, போக்குவரத்துப் போலீசாரை சுமார் அரை மணி நேரம் பாடாய் படுத்தியுள்ளார்...

மதுரை பழங்காநத்தம் அருகே போடி லயன் மேம்பாலத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது பைக் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. பைக்கை ஓட்டி வந்த நபர் முழு போதையில் இருந்ததால் அவ்வழியாகச் சென்றவர்கள் அவரை மடக்கிப் பிடித்து வைத்துக் கொண்டு போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் போதை ஆசாமியிடம் விசாரித்தபோது அவர் ஆணையூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பதும் மாநகராட்சி ஊழியராகப் பணியாற்றி வருபவர் என்பதும் தெரியவந்தது. பாலகிருஷ்ணன் மது போதையில் இருந்ததால் ஆல்கஹாலின் அளவைக் கண்டறிவதற்காக பிரீத் அனலைசர் கருவியில் ஊதுமாறு போலீசார் கூறினர். பாலகிருஷ்ணன் சரியான அழுத்தத்தில் காற்றை ஊதாததால் கருவியில் ரீடிங் சரியாக காண்பிக்கவில்லை.

மீண்டும் மீண்டும் ஊதுமாறு போலீசார் வற்புறுத்திய நிலையில், அவரோ பிரீத் அனலைசர் கருவியை கையில் பிடித்துக் கொண்டு விரல்களை தட்டி "பீப்பி" வாசிக்கத் தொடங்கினார்.

பாலகிருஷ்ணன் கையைப் பிடித்து அதன் மீது ஊதிக் காண்பித்த காவலர், அதேபோல் கருவியில் ஊதுமாறு கூறினார். ஆனாலும் சரியாக ஊதாமல் பாடாய்ப்படுத்தினார் பாலகிருஷ்ணன்.

ஒரு கட்டத்தில் கடுப்பான போலீசார் சரியா ஊதுடா என ஆவேசமாகவே, “ஏன் சார் என்னை டார்ச்சர் பண்றீங்க” என பதிலுக்கு கடுப்பானார் பாலகிருஷ்ணன்.

ஒரு கட்டத்தில் போலீசார் மிரட்டி ஊதவைத்த போது பிரீத் அனலைசரே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போதை அளவு 315 காட்டியது. போதை அளவு அதிகமாக இருந்தால் பாலகிருஷ்ணனை காவல் நிலையம் கொண்டு சென்று 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் போதை தெளிந்ததும் உறவினர்களை காவல் நிலையம் வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

அபராதம் கட்டிய பின்னர் டூவீலரை எடுத்து செல்லலாம் என போலீசார் கூறியதால் 300 ரூபாய்க்கு மது அருந்தியதற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டியது இருக்கிறதே என்ன புலம்பியவாறு சென்றார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement