செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒற்றை தேங்காயால் மழையை நிறுத்திய திமுக நிர்வாகி..! அது எப்படி திமிங்கலம் உங்களால் மட்டும் முடியுது

Jun 14, 2023 10:32:19 AM

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கபடி போட்டியில் மழை குறுக்கிட்டதால், மழை நிற்க வேண்டி ஒற்றைத் தேங்காயை திமுக நிர்வாகி வீசினார். அதன் பின்னர் மழை பெய்யாததால் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

கண்ணாடியை திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும் என திரைப்படத்தில் வரும் வசனம் போல சிவகங்கையில் மழை நிற்க வேண்டி ஒத்தை தேங்காயை சாமியை கும்பிட்டு, ஸ்டாலின் பேனருக்கு வெளியே வீசி திமுக நிர்வாகி ஒருவர் மழையை நிறுத்தி விட்டதாக கட்சியினர் கூறுகின்றனர்.

சிங்கம்புணரியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட தென்னிந்திய அளவிலான பெண்களுக்கான கபடி போட்டியில் இந்த விநோதத்தை திமுகவினர் அரங்கேற்றினர்.

பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட மின்னொலி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலங்களிலிருந்து 18 அணிகள் பங்கேற்றன.

இரண்டு நாள் கொண்ட போட்டியின் முதல் நாள் போட்டிகள் சனிக்கிழமை நடத்தி முடிக்கப்பட்டது. 2 ஆவது நாள் போட்டியின் போது மழை பெய்ததால் அட்டவணைப்படி போட்டியை நடத்தி முடிக்க முடியவில்லை. இதனால், 3 வது நாளுக்கு போட்டி தள்ளி வைக்கப்படுவதாகவும், அன்றும் மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

3வது நாளில் போட்டி துவங்கிய போதே மழையும் தூறியது. என்ன செய்வதென யோசித்த திமுகவினர், நிலத்தடி நீரோட்டம் பார்க்கும் கட்சியின் நிர்வாகி மகேந்திரனிடம் ஐடியா கேட்டனர்.

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்போது மழை வருவதை தடுக்க ஒரு தேங்காயை எடுத்து வருண பகவானை வேண்டி கூரையில் போட்டு விட்டால் அன்று மழை பெய்யாது என்பது அப்பகுதியில் பரவலாக நம்பப்படும் ஒரு நம்பிக்கை. இதனை கழக உடன்பிறப்புகளிடம் மகேந்திரன் சொல்ல அவர்களும் ஆஹா பிரமாதமான ஐடியா என சொல்லி அதனை செயல்படுத்த கூறினர்.

அவரும் பய பக்தியுடன் மேடைக்கு ஏறி மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் படம் போட்ட பேனரை பார்த்து ஒரு கும்பிடு, எதிர் திசையில் ஒரு கும்பிடு என போட்டு விட்டு தேங்காயை பேனருக்கு வெளியே தூக்கிப் போட்டு விட்டு, நிகழ்ச்சியை இனி நடத்தலாம் என உத்தரவாதம் கொடுத்தார்.

உடனடியாக நம்பிக்கையுடன் கழகத்தினர் களத்தை சரி செய்து அமைச்சர் பெரியகருப்பனை வரவழைத்து போட்டிகளையும் விறு விறுப்பாக நடத்தி முடித்தனர் திமுகவினர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement