செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மீண்டும் ரெய்டு.. அரசு பங்களாவிலும், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் திவீர சோதனை..!

Jun 13, 2023 04:22:38 PM

சென்னை மற்றும் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தலைமைச் செயலகத்திலும் அமைச்சரின் அறையில் ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்...

சென்னை டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வசித்து வரும் அரசு பங்களாவில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலையில் அதிகாரிகள் வந்த போது நடைபயிற்சிக்காக வெளியே சென்றிருந்த செந்தில் பாலாஜி, சோதனை பற்றி தகவல் அறிந்து அவசரமாக வீடு திரும்பினார். அப்போது பேட்டியளித்த அவர், சோதனை நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார். ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டால் அது குறித்து விளக்கமளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, வங்கி பண பரிவர்த்தனை தொடர்பாக ஸ்டேட் பேங்க் அதிகாரிகளை சோதனை நடைபெறும் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு வரவழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பிற்காக செந்தில் பாலாஜி வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய அதி விரைவுப் படையினர் வரவழைக்கப்பட்டனர்

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வங்கி அதிகாரிகளுடன் அங்கு சென்ற அமலாக்கத்துறையினர் ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், சுமார் 3 மணி நேரம் வாசலிலேயே காத்திருந்தனர். சி.ஆர்.பி.எப். வீரர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்புடன் அசோக்கின் வீட்டில் அவர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிலும், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் குமார் வீட்டிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ராயனூரில் அமைச்சரின் உறவினரான கொங்கு மெஸ் சுப்ரமணி, வெங்கமேட்டில் உள்ள நண்பர் சண்முகம் ஆகியோரின் வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 9 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

10 நாட்களுக்கு முன் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்களில் அடிப்படையிலும், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாகவும் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement