செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எடும்மா 50 ரூபாய்.. முதியோர்களிடம் அதிகார பிச்சை எடுக்கும் வங்கி காசாளர்..! வீடியோ எடுத்ததால் அம்பலம்

Jun 11, 2023 08:51:13 AM

சேலத்தில், முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு வரும் வயோதிகர்களிடம் கனரா வங்கி பெண் காசாளர் ஒருவர் கறாராக 50 ரூபாய் லஞ்சம் வாங்கிய சம்பவம் வீடியோவால் அம்பலமாகி உள்ளது.

OAP என சுருங்க அழைக்கப்படும் முதியோர் உதவித்தொகையைப் பெற சேலம் சத்திரம் பகுதியில் உள்ள கனரா வங்கிக்கிளையில், சேலம் நான்கு ரோடு, சாமிநாதபுரம், அரிசி பாளையம், பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வயதான ஆண்களும், பெண்களும், வெள்ளியன்று குவிந்திருந்தனர். இரு மாதங்களாக அவர்களின் வங்கிக் கணக்கில், முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்படாததால் ஏக்கத்துடன் காத்திருந்தனர்.

முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை கண்ட இளைஞர் நாகராஜன் என்பவர் அங்கு நடக்கின்ற காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தாமதமாக வந்த அந்த வங்கி காசாளர் உஷா, முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்படும் வங்கி கணக்குப் புத்தகத்தை வாங்கி வரவு வைக்க தொடங்கியதும் அனைவரிடமும்,  50 ரூபாய் கறாராக கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, 20 ரூபாய் கொடுத்த மூதாட்டியிடம், எஞ்சிய 30 ரூபாய் எங்கே எனக் கேள்வி எழுப்பி, உங்க முகத்தை நான் மறக்க மாட்டேன் என அவர் கூறிய காட்சிகள், வீடியோவில் பதிவாகியுள்ளது. 

கைரேகை எடுத்துக்கொள்ளாதவர்கள் ஒருபுறமாக வாங்க எனக்கூறும் அந்த பெண் காசாளர், பெரியவர்கள் ஒவ்வொருவருக்கும் பதிலளித்துக் கொண்டும், அவர்களிடம் விசாரித்துக் கொண்டும், பணியாற்றினாலும்,50 ரூபாயை பெற்றுக்கொள்வதில், கண்ணும் கருத்துமாக இருந்தார்....

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நாகராஜ் கூறும் போது, அந்த வங்கி காசாளர் முதியோர் பணம் பெற வந்தவர்களிடம் மிகவும் கெடுபிடியாக லஞ்சம் வாங்கியதாக ஆதங்கம் தெரிவித்தார்.

வயதான காலத்தில், குடும்பத்தினரின் மாற்றாந்தாய் மனப்பான்மையால் நடத்தப்படும் பெரியவர்களும், வயதான பெண்களும், ஆதரவின்றி தவிப்பவர்களும், குறைந்தபட்ச தொகையை பெறுவதற்கு கூட லஞ்சம் தரும் சூழல், முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.....


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement