செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கல்வராயன் மலை அடிவாரத்தில் கள்ளச்சாராய விற்பனை படுஜோர்.. "24 ஹவர்ஸ் கிடைக்கும்" ஆதாரமாக சிக்கிய காட்சிகள்!

May 26, 2023 06:11:09 PM

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கள்ளச் சாராய விற்பனை நடைபெற்று வருவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது....

கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ள கல்வராயன் மலையில்,நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூகவிரோதிகள் சிலர் பேரல் பேரல்களாக கள்ளச்சாராயம் காய்ச்சி அவற்றை மலையடிவாரத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். மலைக் கிராமங்கள் என்பதால், அங்கு விற்கப்படுவது வெளியே தெரியாததால், கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்க அதிகாலை முதலே இளசுகள் முதல் பெருசுகள் வரை பலரும் குவிகின்றனர்.

ஊர் பொதுமக்களும் இதற்கு துணைபோவதால், ஊருக்கு ஊர் ஏலம்விடப்பட்டு குறிப்பிட்ட நபர்கள் கள்ளச்சாராயம் விற்பனையை தொடர்ந்து நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய சமூக ஆர்வலர்கள், பேட்டரி மூலப் பொருட்களை வைத்து சாராயம் காய்ச்சுவதால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், காவல்துறையில் கறைபடிந்த அதிகாரிகள் சிலர் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதால், தமிழகத்தில் கள்ளச்சாராயத்தின் தலைநகரமாக கல்வராயன் மலை மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதற்கு ஆதாராமாக, அண்மையில் கல்வராயன் மலையடிவாரத்திலுள்ள வீட்டில் குளியலறையில் கேன்களில் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்து, அதனை கட் அண்ட் ரைட்டாக 100 ரூபாய்க்கு தான் விப்பேன்.. என்று ஒருவர் கூறும் காட்சிகளும்,

முதியவர் ஒருவர் குடிநீர் வாட்டர் கேனில் அளந்து கள்ளச்சாரத்தை விற்பது உள்ளிட்ட வீடியோ காட்சிகளும் கள்ளச்சாராய விற்பனையை அம்பலப்படுத்தி உள்ளன.

கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், உயிரிழப்புகள் குறித்தும் மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சாராய விற்பனையை முழுவதுமாக தடைசெய்து, கள்ளச்சாராயம் இல்லா கல்வராயன் மலையை உருவாக்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement