செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பிரதமரிடம் வழங்கப்படும் தமிழகத்தின் செங்கோல்..!! பாரம்பரியத்தை எதிரொலிக்கும் நீண்ட நெடிய வரலாறு

May 24, 2023 05:49:45 PM

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் பிரதமரிடம் தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார், உள்துறை அமைச்சர் அமித் ஷா. அந்த செங்கோலின் சிறப்பையும் வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறது இந்த செய்தித் தொகுப்பு....

சொக்கத் தங்கத்தினால் ஆன இந்த செங்கோல் தான் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட உள்ளது. பிரதமர் இதை புதிய கட்டிடத்தில் சபாநாயகரின் இருக்கை அருகே வைப்பார் என்று தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, நீதி நெறி தவறாமல், எந்தச் சார்பும் இல்லாமல் ஆட்சி நடத்துவதை செங்கோல் பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்.

இந்த செங்கோலின் பின்னணியில் பல நூறு ஆண்டுகளின் வரலாறு உள்ளது. 1947-இல் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் வேளை நெருங்கிய போது, ஆட்சி மாற்றத்தை எதன் மூலம் குறிப்பது என்று பிரிட்டிஷ் அரசின் அப்போதைய கவர்னர் ஜெனரல் லார்ட் மவுன்ட் பேட்டன் ஜவஹர்லால் நேருவிடம் கேள்வி எழுப்பினார். இது பற்றி மூதறிஞர் ராஜாஜியிடம் நேரு ஆலோசித்த போது, முற்கால தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது செங்கோல் வழங்கும் பழக்கத்தைப் பற்றி குறிப்பிட்டு, அதையே இப்போதும் செய்யலாம் என்று யோசனை கூறினார் ராஜாஜி. இதை நேருவும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, செங்கோலை உருவாக்கும் பொறுப்பு திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிகரிடம் வழங்கப்பட்டது.

திருவாடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த குமாரசாமி தம்பிரான், மாணிக்கம் ஓதுவார் ஆகியோர் சிறப்பு விமானத்தில் டெல்லிக்குச் சென்று 1947 ஆகஸ்ட் 14-ஆம் தேதி இரவு 11-45 மணிக்கு செங்கோலை மவுன்ட் பேட்டனிடம் இருந்து வாங்கி நேரு கையில் வழங்கினார். டி.என். ராஜரத்தினம் நாதஸ்வரம் ஒலிக்க அரசியலமைப்பு நிர்ணய மன்றத்துக்கு உரிய மரியாதையுடன் கொண்டு சென்று வைக்கப்பட்டது. பின்னர் அலகாபாத் அருங்காட்சியகம் ஒன்றில் இதுவரை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது பிரதமர் கையில் தவழ்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்துற்குள் மீண்டும் ராஜ மரியாதையுடன் நுழைய உள்ளது.

அழகிய வேலைப்பாடுகளுடன் சொக்கத் தங்கத்தால் செய்யப்பட்டுள்ள இந்த செங்கோலின் தலைப் பகுதியில் சிவனின் வாகனமான நந்தி இடம் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள நகை வடிவமைப்பாளர் ஒருவர் உருவாக்கிய இது, 8-ஆம் நூற்றாண்டின் சோழ மன்னர்கள் பயன்படுத்திய செங்கோலை மாதிரியாக கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement