செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மக்களே.. அடிச்சான் பாரு ஆப்பு.. கடைகளின் கல்லாவில் குவியும் 2000 ரூபாய் நோட்டுகள்..! பதுக்கிய நோட்டுகள் வெளியே வந்தன

May 24, 2023 07:46:47 AM

கடந்த 3 தினங்களாக சென்னையில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு, அதிக அளவில் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்துக்கு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாற்ற இயலாது என்று வங்கிகள் கட்டுப்பாடு விதித்துள்ளதால் வியாபாரிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

2000 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் வருகிற செப்டம்பர் மாதம் 30 ந்தேதியோடு புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படுவதாகவும், தினமும் 20 ஆயிரம் ரூபாய் அளவிற்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்த மூன்றே நாட்களில் பலரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் பப்ளிக் கைகளுக்கு அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளது.

குறிப்பாக பெட்ரோல் பங்குகளில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதற்கு கூட தற்போது சிலர் 2000 ரூபாய் நோட்டுக்களை நீட்டுவதாகவும், ஒரே நாளில் 300 நோட்டுக்கள் தங்கள் பெட்ரோல் நிலையத்துக்கு வந்ததாகவும், இதனால் சில்லறை கொடுக்க இயலாமல் தவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

போரூர் பகுதியில் அண்ணாச்சி காய்கறி கடை நடத்திவரும் கார்த்திகேயன் கூறும் போது கடந்த 3 நாட்களாக 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சாமாணிய மக்களின் கண்ணில் படாத 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் தற்போது காய்கறி கடை, மளிகை கடை, சிக்கன் கடை, பாத்திரக்கடை என அனைத்து இடங்களிலும் தாராளமாக புழங்குவதாகவும், வங்கிகளில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாற்ற இயலாது என்பதால் தங்கள் கைகளுக்கு வரும் 2000 ரூபாய் நோட்டுக்களை எப்படி மாற்றுவது ? என்று சில வியாபாரிகள் விழிபிதுங்கி போயுள்ளதாகவும், சிலர் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதை ஏதோ கள்ள நோட்டை மாற்றுவது போல பார்ப்பதாகவும் தெரிவித்தனர்

அறிவித்த 3 நாட்களிலேயே இவ்வளவு 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளிவந்துள்ள நிலையில் நாட்கள் செல்ல செல்ல பெரிய அளவில் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்துக்கு வரும் போது கடுமையான சில்லறை தட்டுப்பாடு ஏற்படும் என்கின்றனர் வியாபாரிகள். அதே நேரத்தில் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யும் 2000 ரூபாய் நோட்டுக்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement