செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்... அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி...!

May 23, 2023 07:54:07 PM

கல்வியாளர், தொழில் அதிபர், ஆன்மீகவாதி என பல முகம் கொண்ட மதுரை கருமுத்து கண்ணன் உடல்நலக் குறைவால் தமது 70வது வயதில் காலமானார்.

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்காராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்ததோடு, பல கல்வி நிறுவனங்களின் நிர்வாகியாகவும், தியாகராஜர் நூற்பாலைகளின் தலைவராகவும் இருந்த கருமுத்து கண்ணன், மத்திய அரசின் ஜவுளி குழுத்தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

உடல்நலக்குறைவால் கடந்த சில வாரங்களாக ஓய்வெடுத்து வந்த அவர் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, மதுரை கோச்சடையில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மூர்த்தி, பெரியகருப்பன் ஆகியோருடன் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

சிறந்த கல்வியாளர் மற்றும் கொடையாளரான கருமுத்து கண்ணனின் மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பு என ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ,முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ, கனிமொழி எம்.பி, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆன்மீகவாதிகள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிசடங்குகள் புதன்கிழமை நடைபெறுமென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement