செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காரில் இருந்து நீண்டது ஸ்விக்கி ஊழியரின் கை... காட்டிக் கொடுத்த ஸ்டிக்கர்ஸ்... கால் டாக்ஸி பறிமுதல்..!

May 16, 2023 07:23:20 PM

கோவையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம்  காரில் வந்து நகைப்பறிக்க முயன்ற ஸ்விக்கி ஊழியரையும் ,கார் ஓட்டுனரையும் கைது செய்த போலீசார் கால் டாக்ஸியை பறிமுதல் செய்தனர். கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் சாமர்த்தியமாக மடக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

கோவை பீளமேடு ஹட்கோ காலணி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கவுசல்யா என்ற பெண்ணிடம் காரில் வந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

நம்பர் இல்லாத காரின் பக்கவாட்டில் ஒட்டப்பட்டிருந்த மஞ்சள் வண்ண ஸ்டிக்கரை அடையாளமாக வைத்து காரை தேடி வந்தனர்.

அந்த கார், கொள்ளை முயற்சிக்கு முன்பாக எங்கிருந்து வந்தது என்பதை ஒவ்வொரு சிசிடிவி காட்சிகளாக சேகரித்து ஆய்வு செய்தனர்.

இதில் அந்த வெள்ளை நிற மாருதி சுசுகி சுவிப்ட் டிசயர் கார் சென்னை விமான நிலைய பகுதிகளில் கால் டாக்ஸியாக இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தர்மபுரியை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனர் சக்திவேலை தூக்கிய போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் அவருடன் காரில் சென்று தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஸ்விக்கி ஊழியரான திருவண்ணாமலையை சேர்ந்த அபிசேக் என்பவரையும் மடக்கிப்பிடித்தனர்.

கடந்த 7 வருடங்களாக நட்பில் உள்ள இவர்கள் இருவரும் சேர்ந்து போலீசில் மாட்டிக் கொள்ளாமல் தங்க சங்கிலி பறிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன் படி சம்பவத்தன்று காரின் இருபக்கம் உள்ள நம்பர் பிளேட்டுகளையும் கழட்டிவிட்டு, செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் அவர்களது காரில் ஒட்டியிருந்த சில ஸ்டிக்கர்கள் அவர்களை அடையாளம் காட்டிவிட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேல், அபிசேக் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிசிடிவி காட்சி இல்லையென்றால் இந்த வழக்கில் துப்பு துலக்கி இருக்க முடியாது என்று குறிப்பிட்ட போலீசார் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே சிசிடிவி பொறுத்துவது கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், கொள்ளையர்களை அடையாளம் காணவும் உதவும் என்று சுட்டிக்காட்டினர்.


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement