செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கண்ணீர் குடும்பத்துக்கு கண்ணியமான தீர்வு சொன்ன கோட்டாட்சியர் புகாரி..! இப்படியும் ஒரு அரசு அதிகாரி..!

May 10, 2023 08:22:06 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் கோயிலுக்கு வரி கொடுக்க மறுத்த குடும்பத்தினரை ஊரை விட்டு தள்ளி வைத்த சம்பவம் தொடர்பாக விசாரித்த திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, தண்ணீர் கூட பிடிக்க அனுமதி இல்லை என்று கண்ணீர் விட்ட குடும்பத்தாரை, கைகொடுக்க செய்து ஊரோடு சேர்த்து வைத்த நிகழ்வு அரங்கேறி உள்ளது..

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கனகராஜ்- ஆனந்தி தம்பதியினர். சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் ஆனந்தியின் மூத்த மகன் திருமணிராஜா இளையமகன் பிரவீன்குமார் ஆகியோர் தான் ஊரை விட்டு தள்ளிவைக்கப்பட்டதாக புகார் அளித்தவர்கள்

பக்கத்து ஊரில் உள்ள உறவுக்கார பெண்ணை காதலித்து வந்த திருமணிராஜா, கடந்தாண்டு தனது ஊரில் உள்ள வீரசக்கம்மாள் கோயிலில் வைத்து திருமணம் நடத்த அனுமதி கேட்டுள்ளார். காதல் திருமணத்தை கோயிலில் வைத்து நடத்த முடியாதென ஊர் நாட்டாமைகள் தீர்ப்பு வழங்கியதால், புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் கோயிலில் வைத்து திருமணிராஜா தனது காதலியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஊர் நிர்வாகத்தினர் மீது அதிருப்தியில் இருந்த ஆனந்தி குடும்பத்தினர், இந்த ஆண்டு கோயில் கொடை விழாவிற்கு வரி கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டனர். இதனால், குடும்பத்தினரை ஊரை விட்டு தள்ளி வைத்த வில்லங்க நாட்டாமைகள் பொதுகுழாயில் தண்ணீர் பிடிக்கவும் அனுமதிக்கவில்லையென கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஆனந்தியின் இளைய மகன் பிரவீன்குமார், குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். இந்த மனு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரியிடம் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில், சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கோட்டாட்சியர் புகாரி, டிஎஸ்பி அருள், மற்றும் காந்திநகர் ஊர் நாட்டமைகள், ஆனந்தி குடும்பத்தினர் பங்கேற்றனர்.

"ஒரே ஊரில் இருக்கும் ஒரே சமுதாய மக்கள் இப்படி இருக்கலாமா?" என்ற கேள்வியுடன் விசாரணையை கோட்டாட்சியர் துவங்க, இருதரப்பினரும் தங்களது தவறை ஒத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கனகராஜ் குடும்பத்தினர் கோயிலுக்கான வரிப்பணத்தை கொடுத்தனர்.

சிங்கம் படத்தில் வருவது போல அதான் ஊர்க்காரர்கள் சமாதானம் ஆகி விட்டீங்களே ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கோங்க, கைகளை குலுக்கிக்கோங்க என்று நாட்டாமை போல கோட்டாட்சியர் சொல்ல அவர்களும் ஒருவரையொருவர் கை குலுக்கிக் கொண்டனர்.

புகாரளித்த பிரவீன்குமாரை அழைத்த கோட்டாட்சியர் புகாரி "இது போன்ற விவகாரங்களில் தலையிடாமல் நன்றாக படி தம்பி"..! "படிச்சு ஐஏஎஸ் ஆகி நாலு பேருக்கு நல்லது செய்" என அறிவுரை கூறினார்.

ஊர் நாட்டாமைகளின் புறக்கணிப்பால் கண்ணீருடன் வந்த ஆனந்தியின் குடும்பத்தினர் அரச நாட்டாமையின் அசத்தலான தீர்ப்பால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement