செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மீன்களை போல ஐஸ் கட்டிகளுக்குள் மீனவரின் சடலம்..! கால்களை கட்டி கடலுக்குள் நடந்தது என்ன ?

May 09, 2023 10:31:43 AM

தூத்துக்குடி அருகே கடலுக்கு சென்று கரைக்கு திரும்பிய படகில், கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீன்களை பதப்படுத்துவது போல ஐஸ்கட்டிகளை போட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில் சாயல்குடி பகுதியை சேர்ந்த சரவண பிரபாகர் என்பவர் மீன் பிடி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 4 ம் தேதி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான படகில் சக மீனவர்களுடன் கடலுக்கு சென்றார்.

இநிலையில் கடலுக்கு சென்ற மீனவர் சரவண பிரபாகர் தருவைகுளம் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் வைத்து இறந்து விட்டதாக படகு உரிமையாளர் சேகருக்கு சக மீனவர்கள் வயர்லெஸ்ஸில் தகவல் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து சரவணபிரபாகரின் உடலுடன் படகு திங்கட்கிழமை கரைக்கு திரும்பியது.

படகில் மீன்களை பதப்படுத்தி வைத்திருப்பது போல மீனவர் சரவண பிரபாகரின் சடலத்தை ஐஸ் கட்டி போட்டு பதப்படுத்தி கொண்டுவந்தனர். அவரது கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. அவரது தலை மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் வெட்டுக் காயம் இருப்பதால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கரையில் இருந்து கடலுக்குள் சென்ற முதல் நாளே மீனவர் சரவணபிரபாகர் கரைக்கு திரும்ப வேண்டும் என்று அடம் பிடித்ததாகவும், மறுத்ததால் படகில் இருந்து கடலில் குதிக்க முயன்றதாகவும், அவர் கடலில் குதித்து விடாமல் இருக்க அவரை தனியாக படகில் ஒரு கம்பத்தில் கட்டி வைத்ததாகவும் ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை என்றும் மழுப்பலாக பதில் அளித்துள்ளனர்

சக மீனவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சரவண பிரபாகர் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கலாம் என குற்றஞ்சாட்டி உள்ள உறவினர்கள் தரவைக்குளம் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கொல்லப்பட்ட மீனவருக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்த மர்ம மரணவழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள தருவைகுளம் போலீசார் சரவண பிரபாகருடன் படகில் சென்ற சக மீனவர்களான ஞான செல்வம் , செல்வராஜ், பழனி, நிக்குலாஸ் , அதிர்ஷ்டராஜ், சுவிட்சன், நிக்கோலஸ் மணி ,சந்தன மாரி செல்வம் ஆகியோரிடம் நடுக்கடலில் படகில் நடந்தது என்ன என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement