செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கழிவுநீர் கால்வாயில் மூழ்கிய சிறுமி... கத்திகூச்சலிட்ட பெண்கள்... காவலனாய் வந்த இளைஞர்... பரபரப்பான சிசிடிவி காட்சிகள்..!

May 05, 2023 07:41:02 PM

தேனியில் கழிவுநீர் வாய்க்காலில் மூழ்கி உயிருக்கு போராடிய சிறுமியை அந்த பகுதி இளைஞர் ஒருவர் உயிரோடு மீட்ட பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த ஆபத்பாந்தவனால் சிறுமி காப்பாற்றப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..

தேனியில் கழிவு நீர் கால்வாயாகிப்போன ராஜவாய்க்காலில் மூழ்கிய சிறுமியை,தக்க நேரத்தில் குதித்து மீட்டு உயிரை காப்பாற்றிய காட்சிகள் தான் இவை ..!

தேனி மாவட்டம் தேனி பங்களா மேடு 32 வது வார்டில் வசித்து வரும் முத்து, மாரியம்மாள் தம்பதியரின் மகள் கீர்த்தனா.

வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி கீர்த்தனா, சுற்றுச்சுவர் உடைந்து திறந்த நிலையில் காணப்பட்ட ராஜா வாய்க்காலில் இறங்க முயன்றுள்ளார்

மூதாட்டி ஒருவர் சத்தமிட்டதால் அங்கிருந்து விலகிச்சென்ற சிறுமி பின்னர் ஓடி வந்து அந்த வாய்க்காலில் இறங்கியதால் அடுத்த சில வினாடிகளில் தத்தளித்து மூழ்க தொடங்கினார்

இதனை கண்டு பதறிப்போன இரு மூதாட்டிகள் சிறுமி விழுந்ததை கண்டு கூச்சலிட்டபடி உதவி கோரினர்

பெண்கள் எல்லாம் கத்தி கூச்சலிட்டபடி இருக்க அங்கு வந்த இளைஞர் ஒருவர் அந்த சாக்கடைக்குள் இறங்கி மூழ்கிய சிறுமியை தூக்கி கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றினார்

குழந்தையை கவனிக்காமல் மெத்தனமாக வீட்டுக்குள் இருந்த தாயை அங்கிருந்தவர்கள் அடிப்பது போல எச்சரித்தனர்.

மீட்கப்பட்ட குழந்தை கழிவுநீரை குடித்திருப்பதால் தேனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ராஜவாய்க்காலில் அப்பகுதி மக்கள் மீன்பிடித்தும், குளித்தும் சென்ற நிலையில் பெருகி வரும் மக்கள் தொகை ஆக்கிரமிப்பு குடியிருப்புகளால், கழிவு நீர் வாய்க்காலாக மாறிப்போனதாக கூறப்படுகின்றது.

தடுப்புச்சுவர் இடிந்து பல மாதங்கள் ஆகியும் அதனை சீரமைக்க தவறிய தேனி நகராட்சியின் அலட்சியப் போக்கால் சிறுமி கால்வாயில் இறங்கிய விபரீதம் அரங்கேறியதாக குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், தக்க நேரத்தில் அந்த இளைஞர் காப்பாற்றி இருக்காவிட்டால் சிறுமி உயிரிழந்திருப்பார் என்றும் தெரிவித்தனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement