செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காவல் நிலைய வாசலில் மனைவியின் காதலனை கத்தியால் பலியிட்ட கணவர்.. பெண் போலீசார் அதிர்ச்சி..!

May 05, 2023 09:31:39 AM

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில், மனைவியின் காதலனை கத்தியால் குத்தி பலியிட்ட கணவன் போலீசில் சரண் அடைந்தார். திருமணம் கடந்த காதலுக்கு பஞ்சாயத்து செய்ய முயன்ற போலீசாரை மிரள வைத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு....

திருமணம் கடந்த காதலில் விழுந்தவரை பெண்ணின் கணவர் கத்தியால் குத்தி நெஞ்சை பிளந்ததால் ரத்த வெள்ளமாக காட்சி அளிக்கும் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் இது தான்..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை ஒன்றியம் கோம்பை தொழுவைச் சேர்ந்தவர் தீபாவளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் தடம் மாறிய சங்கீதா அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரோடு திருமணம் கடந்த காதலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவரம் கணவன் தீபாவளிக்கு தெரியவரவே , தனது மகனின் எதிர்காலம் கருதி , மனைவி சங்கீதாவை கூப்பிட்டு பலமுறை திட்டி அறிவுரை கூறி கண்டித்ததாக கூறப்படுகிறது. இருந்தும் அடங்காத சங்கீதா, ஈஸ்வரனுடன் தலைமறைவானதோடு, கணவன் தன்னை அடித்து துன்புறுத்தி தொந்தரவு செய்வதாக மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. வியாழக்கிழமை விசாரணைக்கு வருமாறு மூவரையும் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆண்டிப்பட்டி போலீசார் அழைத்தனர்

இதையடுத்து விசாரணைக்காக ஈஸ்வரன் மற்றும் சங்கீதா ஆகியோர் ஜோடி போட்டு வந்தனர். இதனை பேருந்து நிலையத்தில் மறைந்திருந்து பார்த்த தீபாவளி கையில் கத்தியுடன் விரட்ட தொடங்கினார். இருவரும் பாதுகாப்புக் கேட்டு ஆண்டிப்பாட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குள் நுழைய முயன்ற போது இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

மனைவியை அபகரித்துச்சென்ற ஈஸ்வரனை காவல் நிலைய வாசலில் வைத்து நெஞ்சை பிளந்து பலியிட்ட தீபாவளி, மனைவியின் தலை மற்றும் உடலில் சில இடங்களில் வெட்டினார். ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சங்கீதா பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை பார்த்த பெண் போலீசார் அதனை தடுக்க இயலாமல் அதிர்ச்சியில் நின்ற நிலையில், அவர்களிடமே கத்தியுடன் தீபாவளி சரண் அடைந்துள்ளார். இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement