செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அன்ன பூர்ணா ஓட்டல் மசாலா தோசைக்குள் கரப்பான் பூச்சி வந்தது எப்படி? அதிகாரிகள் சொன்ன அற்புத விளக்கம்..!

May 02, 2023 10:16:40 PM

கோவை அன்னபூர்ணா சைவ உணவகத்தில் மசால் தோசைக்குள் கரப்பான் பூச்சி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் உணவக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்த நிலையில், உணவுப்பொருள் பாதுகாப்புத்துறையினர் மசாலா தோசையை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்...

கோவையில் பிரசித்தி பெற்ற உணவகங்களில் ஒன்று அன்னபூர்ணா சைவ உணவகம். இங்கு உணவு பதார்த்தங்களின் சுவையும், விலையும் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சாய்பாபா காலனி என்.எல்.ஆர் சாலையில் உள்ள அன்னபூர்ணா ஓட்டலில் மசால் தோசை ஆர்டர் செய்த தம்பதிக்கு பரிமாறப்பட்ட தோசைக்குள் கரப்பான் பூச்சி ஒன்று இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது

ஆசையாக வாங்கிய மசாலா தோசையை பிய்த்து சாப்பிட முயன்ற போது மசாலாவுக்குள் இருந்து கரப்பான் வெளியே தெரிந்ததால் மிரண்டு போன வாடிக்கையாளர் ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

தாங்கள் வாங்கிய மசாலா தோசைக்குள் கரப்பான் பூச்சி ஒன்று இறந்து கிடந்ததை வீடியோவாக எடுத்து மாவட்ட உணவு பொருள் பாதுகாப்புத்துறையினருக்கு புகாராக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சென்ற அதிகாரிகள் சமையல் அறையை சோதித்து இரண்டு வாரங்களுக்குள் பூச்சிகள் இல்லாத அளவுக்கு சரிசெய்ய எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி இருப்பதாகவும், ஆய்வுக்காக மசாலவின் மாதிரி எடுத்துச்சென்றதாகவும் உணவுபொருள் பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்செல்வன் தெரிவித்தார். தோசையில் இருந்த கரப்பான் வெந்து போனது மாதிரி இல்லை என்றும் எங்கிருந்தோ பறந்து வந்த கரப்பான் பூச்சி தோசையில் இருந்த மசாலாவில் விழுந்திருக்கலாம் என்றும் வினோத விளக்கம் அளித்தார்

அன்னபூர்னா உணவக நிர்வாகம் தரப்பில் கேட்ட போது, இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மேலாளர் விடுப்பில் சென்றிருப்பதாகவும், அவர் இரு தினங்கள் கழித்துதான் திரும்பி வருவார் என்றும் தெரிவித்தனர். கோவை மாவட்ட நிர்வாகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அன்ன பூர்ணா ஓட்டலில் இருந்து தான் அனைத்து விதமான உணவு பொருட்களும் கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடதக்கது.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement