செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பிறந்த நாள் இறந்த நாளாகிய சோகம்.... பாலாற்றில் மதுபோதையில் குளித்த கல்லூரி மாணவர் பலி..!

May 01, 2023 03:38:53 PM

செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தின் கீழே ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கைப் பலகையை பொருட்படுத்தாமல் மது போதையில் குளித்த கல்லூரி மாணவன் தனது 19-வது பிறந்த நாளன்றே உயிரிழந்தார்.

பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான மோகன்ராம், பிறந்தநாளையொட்டி நண்பர்களுக்கு இருங்குன்றப்பள்ளி பம்ப் அவுஸ் அருகே மது விருந்து அளித்ததாக கூறப்படுகிறது. சுற்றி அனைத்து இடங்களிலும் வறண்டு கிடந்தாலும், குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் குளம் போல தேங்கி உள்ளது.

அதில் இறங்கிக் குளித்த பலர் ஏற்கனவே இறந்துவிட்டதால், ஆபத்தான பகுதி என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதை பொருட்படுத்தாத மோகன்ராம், நீச்சல் தெரியாத போதிலும் மது போதை தலைக்கு ஏறி தண்ணீரில் இறங்கியதாக தெரிகிறது.

சற்று நேரத்தில் அவர் நீரில் மூழ்கியுள்ளார். அவரது நண்பர்கள் கூச்சலிட்டதைக் கேட்டு, அப்பகுதியில் இருந்த சிலர் மூச்சுப் பேச்சு இல்லாத மோகன்ராமை நீரில் இருந்து வெளியே இழுத்துள்ளனர்.சோதித்துப் பார்த்ததில் அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement