செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"தவணை கட்ட முடியலன்னா பிச்சை எடு" குடும்பத்தினரை ஆபாச வார்த்தைகளால் குதறிய ஃபைனான்ஸ் நிறுவன ஊழியரின் ரௌடித்தனம்

May 02, 2023 07:44:09 AM

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இயங்கி வரும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கிய ஓட்டுநர், ஒரே ஒரு மாத தவணை கட்டவில்லை என்பதற்காக, அவரை போனில் அழைத்த ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர், ஆபாச சொற்களால் அவரது மனைவி உட்பட குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசியுள்ளார். பிச்சை எடுத்தாவது தவணையைக் கட்டு, இல்லை என்றால் தற்கொலை செய்துகொண்டு சாவு என்றெல்லாம் பேசிய ஆடியோவை வைத்து காவல் துறையில் பைனான்ஸ் நிறுவன ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் "5 ஸ்டார் - சொத்துக் கடன்" என்ற பெயரில் மைக்ரோபைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் தளிர் மறுகூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான எடிசன் என்பவர், கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பு பைவ் ஸ்டார் நிறுவனத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

13 மாதங்களாக மாத தவணையாக 6 ஆயிரத்து 130 ரூபாயை முறையாகக் கட்டி வந்த எடிசன், வாகன தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக லாரியை விட்டுவந்ததால், வருமானமின்றி, ஏப்ரல் மாத தவணை மட்டும் கட்டவில்லை என கூறப்படுகிறது. எடிசன் தனது சூழ்நிலை குறித்து ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் எடுத்துக் கூறியும், அவரைத் தொடர்பு கொண்ட ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர் பாலாஜி என்பவர், உடனடியாக பணம் கட்ட வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. அவரிடம் முதலில் பொறுமையாக பேசிய எடிசனும், எதிர்முனையில் பேசிய ஊழியர் எல்லை மீறி பேசியதால், பொறுமையிழக்க, இருவரது உரையாடலும் ஆபாச ஆறாக ஓட ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர் பாலாஜி, எடிசனின் மனைவியைப் பற்றி தகாத முறையில் பேசிதோடு, “பிச்சை எடுத்தாவது தவணையை கட்டு, இல்லை என்றால் தற்கொலை செய்துகொண்டு சாவு” எனவும் பேசியுள்ளார். 

இதனால் மனமுடைந்த எடிசன், தற்கொலை எண்ணம் மேலிடும் அளவுக்கு தன்னை ஊழியர் பாலாஜி பேசிவிட்டதாக வேதனை தெரிவித்தார்.

இதுகுறித்து ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர் பாலாஜியிடம் விளக்கம் கேட்டபோது, எடிசன் தான் முதலில் ஆபாசமாகப் பேசியதாகவும் அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் கூறியவர், ஆதார ஆடியோவை உடனடியாக அனுப்புவதாகக் கூறிவிட்டு, அமைதியாகிவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக அந்நிறுவனத்தின் மேலாளர் ரூபனிடம் விளக்கம் கேட்ட போது, எடிசனை சமாதானப்படுத்திவிட்டதாகவும் செய்தி வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். 

ஆனால் அவ்வாறு தன்னை அந்நிறுவனம் தொடர்பு கொள்ளவில்லை என கூறும் எடிசன், ஊழியர் பாலாஜி மீது நடவடிக்கை கோரி போலீசில் புகாரளித்துள்ளார்.

கடன் தவணையை கட்டவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து, கடன் பெற்றவரை இப்படி கண்ணியக்குறைவாகப் பேசும் நிதி நிறுவன ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement