தூத்துக்குடியில் இரவில் சாலையில் நிற்கும் ஆட்டோவில் பேட்டரிகளை முகமூடி அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அண்ணா நகர் 11 ஆவது தெருவில் வரிசையாக நிற்கும் ஆட்டோக்களில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
இரவில் முகமூடி அணிந்து பேட்டரி திருடும் நபர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.