செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உண்மைய சொல்லுங்கடா இது பஸ் நிறுத்தமா? இல்ல மணல் சிற்பமா ? புட்டுபோல உதிருது கட்டுமானம்

Apr 19, 2023 06:16:49 AM

மதுரை அங்காடி மங்கலம் அருகே தொட்டால் உதிரும் மணல் சிற்பம் போல தரமற்ற முறையில் பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டப்பட்டிருப்பதாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

பார்ப்பதற்கு பேருந்து நிறுத்த கட்டிடம் போல காட்சி அளித்தாலும் , தொட்டவுடன் தூண்களில் இருந்து சிமெண்டு பூச்சுகள் புட்டு போல உதிரும் அதிசயம் நிகழ்ந்த இடம் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட அங்காடி மங்கலம் அடுத்த கீழ வடக்கூர்..!

 அமைச்சர் பி.மூர்த்தியின் மதுரை கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட அங்காடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழவடக்கூர் கிராமத்தில் மத்திய அரசின் 15 வது நிதி குழு மனிய திட்டத்தின் கீழ், மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் சூரியகலா கலாநிதியின், நிதியிலிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை ஒன்று கட்டப்பட்டது.

இன்னும் சில நாட்களில் அது திறக்கப்படவுள்ள நிலையில் இந்த கட்டிட தூண்களை லேசாக தொட்டால் கூட சிமிண்ட் பூச்சு உதிர்வதாகவும், உடைவதாகவும் இளைஞர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் திறப்பு விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த பேருந்து நிறுத்ததை கட்டிய ஒப்பந்ததாரர் கணேசன் என்பவரிடம் விசாரணை நடத்திய நிலையில் சொல்லப்பட்ட மதிப்பீட்டை தாண்டி செலவாகிவிட்டதாகதெரிவித்தார். ஊராட்சி தலைவர் தங்கபாண்டியன் கூறும் போது, இளைஞர்கள் சிலர் நிழற்குடைக்கு கீழே அமர்ந்து மது அருந்தி செல்வதை தடுத்ததாலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக ஆத்திரத்தில் இப்படி வீடியோ எடுத்து பரப்பி விட்டனர் என்று தெரிவித்ததோடு, பேருந்து பயணியர் நிழற்குடை கட்டிடத்தை ஒப்பந்ததாரர் தரமான முறையில் கட்டிட்டம் கட்டி தந்தால் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.

இத்தகவல் வேகமாக பரவிய நிலையில் வட்டார வளர்ச்சி அதிகாரி வில்சன், பொறியாளர் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement