செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அதெப்படி திமிங்கிலம்.. வனத்துறைக்கு தெரியாமல் வனத்தில் 4 கி.மீ சாலை ? நீலகிரியில் என்ன நடக்கிறது.?

Apr 17, 2023 11:55:51 AM

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மேடநாடு பகுதியில் அரசியல் பிரமுகரின் உறவினரது 100 ஏக்கர் தேயிலை தோட்டத்திற்காக அத்துமீறி காப்புக்காட்டில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மரங்களை வெட்டி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மேடநாடு காப்புக்காடு, ஒங்கி உயர்ந்த மரங்கள், கண்ணுக்கு எட்டிய தூரமெங்கும் பசுமையை போர்த்திய தேயிலைத் தோட்டங்களால் நிறைந்த பகுதியாகும். இங்கு, அமைச்சர் ஒருவரின் மருமகனுக்கு 100 ஏக்கரில் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது.

தோட்டத்திற்குச் செல்ல வனப்பாதை கட்டுப்பாட்டிலுள்ள சிறிய பாதையை அனுமதி பெற்று பயன்படுத்தி வந்த நிலையில், கனரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு விரிவுப்படுத்தும் பணிகள் திடீரென துவங்கின. அதிர்ச்சியடைந்த வன ஆர்வலர்களால் பாதை விரிவாக்கம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி அரியவகை மரங்கள், மூலிகை செடிகளை அழித்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதும், அரசு சாலையை தனியார் தன் கைவசப்படுத்தி கேட் அமைத்திருந்ததும் தெரிய வந்தது.

உயரதிகாரிகளின் கவனத்திற்கு இப்பிரச்சனை சென்றதால் வேறுவழியில்லாமல், எஸ்டேட் மேலாளர் மற்றும் 2 கனரக இயந்திர ஓட்டுனர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஜேசிபி, ரோடு ரோலர் வாகனத்தை பறிமுதல் செய்த வனத்துறை, தோட்ட உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி தங்களின் கடமையை முடித்துக் கொண்டது.

மலைப்பகுதியில் கனரக வாகனங்களை பயன்படுத்தக் கூடாதென கடுமையான உத்தரவு உள்ள நிலையில், ரோடு ரோலர், ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் எப்படி மலைப்பகுதிக்குச் சென்றன என இயற்கை ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர்.

யானை வழித்தடத்தை மறைத்து கட்டப்பட்ட பல ரெஸ்டாரண்டுகள் நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி இடிக்கப்பட்ட நிலையில், மலையின் அமைப்பையே மாற்றும் வகையில் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும் பணி எப்படி கண்டுகொள்ளாமல் விடப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, கோத்தகிரி வனச்சரகர் சிவாவிடம் கேட்ட போது, தேயிலை தோட்டத்திற்காக பாதையை பயன்படுத்த அனுமதி உள்ளது. அதன்படி அதிலுள்ள சிறிய பள்ளங்களை மட்டுமே சரி செய்துள்ளனர் என்று மிகப்பெரிய விளக்கத்தை அளித்துள்ளார்.

சிறிய பிளாஸ்டிக் பையை எடுத்துச் சென்றாலே தோண்டித்துருவி ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கும் வனத்துறையினர் கண்ணுக்கு இவ்வளவு பெரிய விதிமீறல் மட்டும் எப்படி தெரியாமல் போனது என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement