செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழ் புத்தாண்டு.. காலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள்..

Apr 14, 2023 06:24:28 PM

மகிழ்ச்சிகரமான, மங்கலகரமான ஆண்டாக சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், காலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் சித்திரை திங்கள் முதல் நாள், தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் படி, சுபகிருது வருடம் முடிந்து இன்று முதல் சோபகிருது ஆண்டு தொடங்கியுள்ளது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான வருடமான தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், அனைவருக்கும் இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டி பக்தர்கள் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள், கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.

உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயிலிலும் பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து வழிபட்டனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தனர்.

தஞ்சை பெரியக் கோவிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து பெருவுடையாரை தரிசித்தனர்.

புகழ்பெற்ற நாமக்கல் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் 500 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களை கொண்டு 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலிலும் குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் நீராடி சுவாமியை தரிசித்தனர். 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement