செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தலைமை ஆசிரியருக்கு அடி உதை... பள்ளிக்கு பூட்டு...! பரிதவித்த மாணவர்கள்

Apr 12, 2023 01:22:44 PM

தேனி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியரை அத்துமீறி வகுப்பறைக்குள் புகுந்து அடித்து உதைத்து தாக்கிய அப்பள்ளியின் தாளாளர், 25 மாணவர்களுடன் பள்ளியை இழுத்து பூட்டி விட்டு தலைமறைவாகி உள்ளார். 

தேனி திட்டச்சாலையில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளியில், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் 30 பேர், ஒன்றாம் வகுப்பு முதல் முதல் 5 ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் சென்றாயபெருமாள் என்ற தலைமை ஆசிரியரும், மற்றொரு ஆசிரியையும் பணிபுரிந்து வருகின்றனர்.

அரசு உதவி பெறும் பள்ளி நடத்தி வருவதை மறைத்து அப்பள்ளியின் தாளாளராக உள்ள அன்பழகன், தேனி அல்லிநகரத்தில் செயல்பட்டு வரும் முத்தையா என்ற அரசுப் பள்ளியிலும் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றபோதும், அன்பழகனிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தன்னைக் குறித்து உயரதிகாரிகளிடம் புகாரளிப்பது, பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியரும், ஆசிரியையும் தான் என நினைத்து அன்பழகன் அவர்களை அடிக்கடி துன்புறுத்தியதுடன், பல மாதங்களாக அவர்களுக்கு சம்பளமும் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தற்போது அரசு மூலம் நேரடியாக சம்பளம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த அன்பழகன், தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாளிடம் தகராறு செய்துடன், மாணவ - மாணவிகள் முன்னே ஆபாசமாக பேசி அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார்.

மேலும், பள்ளியின் அனைத்து வகுப்பறைகள் மற்றும் மெயின் கேட்டையும் பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனால் வகுப்பறைகளுக்குள் இருந்த மாணவ, மாணவிகள் அலறத் தொடங்கினர்.

தகவலறிந்து விரைந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தலைமை ஆசிரியர், ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை அறிந்த பள்ளி தாளாளர் அன்பழகன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement