செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தாமிரபரணி தாயின் வரம் ஆத்தூர் வெற்றிலைக்கு கிடைத்தது புவிசார் குறியீடு..! காரமும் சுவையும் அள்ளுது

Apr 12, 2023 10:27:17 AM

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வெற்றிலைக்கு, புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அறுவடை செய்து 10 நாட்களானாலும் காரத்தன்மை மாறாமல் இருப்பதால், வடமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகும் ஆத்தூர் வெற்றிலையின் சிறப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

திருமணம், கோவில் திருவிழாக்கள் என எந்த ஒரு சுபகாரியத்தையும் வெற்றிலை பாக்குடன் ஆரம்பிப்பது தான் தமிழர்களின் பாரம்பரியம்.

மக்களகரமானது மட்டுமின்றி , ஜீரண சக்தியை கொடுக்கும் மருத்துவ குணமிக்க வெற்றிலை தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்.. தேனி மாவட்டம் சின்னமனூர், கூடலூர் காவேரிக்கரை, நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் , வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர், திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியிலும் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான மரந்தலை, வெள்ளக்கோவில், சுகந்தலை, மேல ஆத்தூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் இந்த வெற்றிலை பயிரிடப்படுகிறது. மற்றப்பகுதிகளில் விளையும் வெற்றிலையை விட தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் விளையும் ஆத்தூர் வெற்றிலை கணிசமான காரத்தன்மையுடன், அதிக ஜீரண சக்தியுடன் விளங்குவதால் சிறப்பை பெற்றுள்ளது

பொதுவாக மற்ற ஊர்களில் அறுவடை செய்யப்படும் வெற்றிலை, கோடையில் மூன்று முதல் ஐந்து நாட்கள் மற்றும் குளிர்காலத்தில் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை அதன் தன்மை மாறாமல் இருக்கும். ஆனால் ஆத்தூர் வெற்றிலை எந்த காலநிலையிலும் ஏழு முதல் பத்து நாட்கள் வரை அதன் காரத்தன்மை மாறாமல் தரமாக இருக்கும். இதனால் ஆத்தூர் வெற்றிலை இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள்

இத்தனை சிறப்புகளை பெற்றிருப்பதால் ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு (GI) கிடைத்துள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். வெற்றிலை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கவும், காப்பீடு வசதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement