செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பால் கூட தரக்கூடாதுன்னு பஞ்சாயத்தார் சொல்லிருக்காங்க... அபராதத்துக்கு அஞ்சும் கடைக்காரர்...! இந்த நாட்டாமை பூனைக்கு மணிகட்டுவது யார்...?

Apr 12, 2023 10:27:53 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் மாரண்டபள்ளி கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால், அபராதத்துக்கு பயந்து அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, மளிகைக்கடைகளில் பால் பாக்கெட் கூட கொடுக்காமல் திருப்பி அனுப்பும் வீடியோ வெளியாகி உள்ளது.

இவங்க இவ்வளவு பேரும் கூட்டம் போட்டு, ஏதோ நல்ல காரியம் செய்ய போறாங்கன்னு தவறாக நினைத்து விட வேண்டாம்.. நாட்டாமை படத்தில் வருவது போல, ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில், நல்லா இருந்த ஒரு குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைப்பதற்குதான், இந்த கட்டப்பஞ்சாயத்துக்கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது உறவினர்கள் 15க்கும் மேற்பட்டோர் அதே கிராமத்தில் வசித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உறவினர்களுடன் உண்டான நிலப்பிரச்னை தொடர்பாக பேசி தீர்ப்பதற்காக கூடிய கட்டப்பஞ்சாயத்து குழுவின் விசாரணைக்கு, கிருஷ்ணன் செல்ல மறுத்ததால், அன்று முதல் கிருஷ்ணன் மீது தேவையற்ற அவதூறுகளை ஊர் பெரியோர்கள் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பாக, மீண்டும் கட்டப்பஞ்சாயத்து குழு கூடியது. அப்போது ஊருக்கு கட்டுப்படும் வரை கிருஷ்ணனுடன் யாரும் பேசக்கூடாது என்று கூறிய பஞ்சாயத்தார், 5000 ரூபாய் அபராதமும் விதித்ததாக கூறப்படுகின்றது. இதனை ஏற்க மறுத்ததால் கிருஷ்ணன் குடும்பத்தை ஊரை விட்டு முற்றிலுமாக ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகின்றது. கிருஷ்ணன் குடும்பத்திற்கு கடைகளில் மளிகைப்பொருட்கள், பால் போன்ற எந்த ஒரு அத்தியாவசிய பொருட்களும் கொடுக்கக்கூடாது எனவும், மீறினால் அவர்களுக்கும் 5000 ரூபாய் அபராதம் விதித்து ஊரை விட்டு தள்ளி வைப்போம் என மிரட்டி, கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளதாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார்.

சூளகிரியில் கிருஷ்ணனின் மகள் காஞ்சனா நர்சிங் பயிற்சியில் இருந்த மருத்துவமனைக்கு சென்ற கட்டப்பஞ்சாயத்து குழுவினர், கிருஷ்ணன் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாக கூறி, காஞ்சனாவுக்கு இந்த மருத்துவமனையில் பயிற்சி அளிக்கக்கூடாது என மிரட்டியதாக வேதனையுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement