செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரூ 40 கோடி சுருட்டிய காவலர் குடும்பம்.. தவிக்கும் காவலர்கள்..! போலீசிடமே சுருட்டலா..?

Apr 02, 2023 02:27:49 PM

காஞ்சிபுரத்தில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தைப் போல அதிக வட்டி தருவதாக கூறி நிதிதிரட்டி 40 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, இரு காவலர்கள் உள்பட அவரது குடும்பத்தினர் 8 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம், ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயபாரத். இவர் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணி செய்து வருகிறார்.

இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஆருத்ரா பாணியில் சொந்தமாக அதிக வட்டி தரும் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

பல்வேறு தொழிலில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தை வாடிக்கையாளர்களுக்கு வட்டியாக தருவதாக கதை அளந்த சகாய பாரத், தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் 20 சதவீதம் வரை மாதம் வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி 40 கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்த்ததாக கூறப்படுகின்றது.

இவரது பேச்சை நம்பி ஏராளமான போலீசாரும், கடன் வாங்கி முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில் வங்கியில் காசோலையை மாற்ற இயலவில்லை என்றும், ஆர்.பி.ஐ கண்காணிப்பதாகவும், போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதாகவும் கூறி வட்டி விகிதத்தை 10 சதவீதமாக மாற்றிய சகாய பாரத் குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் பணத்தை வெளியே எடுக்க இயலவில்லை என்று கூறி மொத்த பணத்தையும் சுருட்டியதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்களில் காவலர் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பொது மக்களும் அதிகமாக இருப்பது தெரியவந்ததால். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் காவலர் சகாய பாரத் அவரது மனைவி சௌமியா, காஞ்சியில் போக்குவரத்து காவலராக பணி புரிந்து வரும் சகோதரர் ஆரோக்கிய அருண், காவல் பணியில் இருந்து பள்ளிக் கல்வி பணியில் சேர்ந்த மற்றொரு சகோதரரான இருதயராஜ், இவர்களது தந்தை ஜோசப், தாயார் மரியச்செல்வி ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த மெகா மோசடியை அரங்கேற்றியதை கண்டு பிடித்தனர். இவர்கள் 8 பேரையும் போலீசார் மொத்தமாக கைது செய்தனர்.

இந்த மோசடி வழக்கு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸருக்கு மாற்றப்படும் என்று தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறினால் பொதுமக்கள் நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாறவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே ஐ.எஃப்.எஸ்., ஆருத்ரா கோல்ட் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து காஞ்சிபுரம் மக்கள் பலர் தங்கள் பணத்தை இழந்து தவிக்கும் நிலையில் தற்போது காவலர் குடும்பத்தை நம்பி பல காவலர் குடும்பங்களே பணத்தை இழந்து தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறுக்குவழியில் பணக்காரராக ஆசைப்பட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு மற்றும் ஒரு சாட்சியாக மாறியிருக்கின்றது இந்த மெகா மோசடி சம்பவம்


Advertisement
சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை.. கணக்கில் வராத ரூ.4.24 லட்சம் பறிமுதல்
கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்
என்கவுன்ட்டர் மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்... தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
ராமநாதபுரம் அருகே 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்க நீதிபதிகள் உத்தரவு
நெல்லையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது
நாகப்பட்டினத்தில் உரிய உரிமம் இன்றி சுகாதாரமற்ற முறையில் இயங்கிய பேக்கரிக்கு பூட்டு
கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
திருச்சியில் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சவாதிகள் என அய்யாக்கண்ணு விமர்சனம்
ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின்மாற்றிகள் வாங்கியதில் 400 கோடி ரூபாய் ஊழல்... தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்


Advertisement