செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தலையில் ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்தை பூட்டி அசல் கோளாறு அட்ராசிட்டி ..! போலீசார் மீது ரத்தத்தை பூசி வம்பு

Mar 29, 2023 06:59:10 AM

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் காவல் நிலையத்துக்கு, தலையில் ரத்தம் சொட்ட சொட்ட  வந்த இளைஞர் காவல் நிலைய இரும்பு கேட்டை இழுத்து பூட்டி ரகளை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  மதுவால் பாதை மாறி காவலர்களின் சட்டையில் ரத்ததை பூசி வம்பிழுத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..

காவல் நிலையத்த்தின் இரும்பு கேட்டை இழுத்து பூட்டி போலீசாரையே உள்ளே விடாமல் வெளியே தடுத்து நிறுத்தி தனது பவரை காட்டிய அன்பு இவர் தான்..!

தருமபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்தவர் அன்பு .இவர் சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஊழியராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வேலை பறிபோனதால் அது முதல் காக்கி சட்டையை பார்த்தாலே வெறி ஏறும் மன நிலைக்கு சென்றுள்ளார். 6 மாதத்துக்கு ஒரு முறை ஊருக்குள் வந்து யாரையாவது அடித்து வம்பு இழுத்து செல்வது வழக்கம் என்று கூறப்படும் நிலையில், மீண்டும் ஊருக்குள் வந்து வம்பிழுத்ததால் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

தலையில் ரத்தம் சொட்ட சொட்ட கடத்தூர் காவல் நிலையத்திற்கு சென்ற அரைடவுசர் அன்பு போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். 6 மாதங்களுக்கு முன்பாக தன்னை தாக்கியவர்கள் மீது கொடுத்த புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கேள்வி எழுப்பினார்

அங்கு சாதாரண உடையில் அமர்ந்திருந்த காவலர் அன்புவை கண்டுகொள்ளாமல் செல்போனில் மூழ்கிய படி இருந்தார். இதையடுத்து அவரது சட்டையில் ரத்தத்தை எடுத்து பூசி வம்பு செய்த அன்பை கண்டு பயந்து அவர் காவல் நிலையம் உள்ளே சென்றார்

உள்ளே இருந்து சக போலீசாரை அழைத்து வந்த போது அன்பு அடுத்த கட்ட அடாவடியாக காவல் நிலைய நுழைவாயில் கேட்டை இழுத்துப் பூட்டி வைத்துக் கொண்டு, காவலர்களை உள்ளே நுழைய விடாமல் தகராறு செய்தார்.

அங்கு பணியில் இருந்த காவலர்களை அன்பு, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிய போதும், காவல்துறையினர் அதனை கண்டு கொள்ளாமல் அவரை அங்கிருந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்

மருத்துவமனையில் வைத்து இவரை செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்து அவர்களிடம் வம்பிழுக்க சென்றார். போலீசார் தடுத்து அவரை சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர்.

ஒரு காலத்தில் சென்னையில் உள்ள ஒரு தொலைக்காட்சியின் ஊழியராக பணிபுரிந்த அன்பு , மதுவுக்கு அடிமையாகி போலீஸ் வழக்கில் சிக்கியதால் அவ்வப்போது இது போன்று ரகளையில் ஈடுபடுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.மது பழக்கம் குடியை மட்டுமல்ல ஒரு மனிதனின் குணத்தையும் கெடுத்துவிடும் என்பதற்கு சாட்சியாக மாறி உள்ளார் அன்பு..!


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement