செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கரும்பு வெட்ட கமிஷன் கேட்கும் பண்ணாரி சர்க்கரை ஆலை..! கையறு நிலையில் விவசாயிகள்

Mar 19, 2023 04:48:02 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மெத்தனபோக்கு காரணமாக கரும்பு வெட்டுவது தாமதமாவதால் கரும்புகள் காய்ந்து அவதி அடைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் பண்ணாரி அம்மன் சுகர் லிமிடெட் என்னும் சர்க்கரை ஆலை மூலமாக வெட்டப்படுகின்றன.

வெட்டுக்கான அனுமதி வழங்கி இரண்டு மாதங்கள் ஆகியும் இன்று வரை கரும்பை வெட்டாததால் கரும்புகள் காய்ந்து வருவதாகவும், அதேபோல் கரும்பை வெட்டுவதற்கான ஆட்களை தனியார் சர்க்கரை ஆலையே அனுப்பி வைக்கும் நிலையில், தற்போது ஆட்கள் இல்லை எனக் கூறி நீங்களே வெட்டி அனுப்பி வையுங்கள் என ஒருதலைபட்சமாக பேசுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

தனியார் சர்க்கரை ஆலையில் உள்ள பீல்டு அலுவலர்கள் குறிப்பிட்ட சிலரிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு கட்டிங் ஆர்டர் இல்லாமாலும், அடுத்த மாதம் கட்டிங் ஆர்டர் உள்ள கரும்புகளையும் தற்போதே வெட்டி வருவதாகவும் கனகனந்தல் கிராம விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, 800 ரூபாய்க்கு வெட்டிய ஆட்கள் தற்போது ஆட்கள் பற்றாக்குறை காரணத்தை காட்டி 1200 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரை கேட்பதாகவும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ஆலை நிர்வாகம் 2700 ரூபாய் மட்டுமே வழங்கும் நிலையில், வெட்டுவதற்காக மட்டுமே 1400 வரை கூலி கேட்பதால் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.

தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து, அனைத்து கரும்புகளையும் உடனடியாக வெட்டுவதற்கான வழி வகையை தமிழக அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரி கூறும் போது, கமிஷன் கேட்கும் அதிகாரி குறித்து பெயர் விவரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement