செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நெல்லில் விஷம் கலந்து 42 மயில்கள் கொலை.. வயல் வெளியில் அட்டூழியம்..! மர்ம நபரை வனத்துறை தேடுகின்றது

Mar 07, 2023 10:12:31 PM

மதுரை ஆண்டார் கொட்டாரம் பகுதியில் வயல்வெளிகளில் மேய்ந்த 40 க்கும் மேற்பட்ட மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த மயில்களை சேகரித்த வனத்துறையினர், குருணை மருந்து கலந்த நெல்லை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

மதுரை ஆண்டார் கொட்டாராம் பகுதியில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது. அதில் 10 ஏக்கர் அளவிற்கு பயிரிடப்பட்ட நெல் வயல் ஒன்று அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. அதன் அருகிலேயே கண்மாய் மற்றும் கருவேல மரங்கள் அடர்ந்த காட்டு பகுதி உள்ளது

இந்த கருவேலமரக்காட்டுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட மயில்கள் வசித்து வந்த நிலையில் சம்பவத்தன்று அங்குள்ள வயல் வெளியில் ஒன்பது மைல்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் வன அலுவலர் உள்ளிட்டோர் இப்பகுதியில் வந்து ஆய்வு செய்தபோது திங்கட் கிழமை ஒரே நாளில் 18 மயில்கள் ஆங்காங்கே இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.

செவ்வாய்கிழமையும் இப்பகுதியில் ஏராளமான மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அந்த காட்டு பகுதியில் இருந்து 18 மயில்களை கைப்பற்றி எடுத்து சென்றனர் இதுவரை இந்தப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் வனத்துறையினர் அங்குள்ள வயல் வெளி பகுதியில் குருணை மருந்து கலந்த நெல்மணிகளை கைப்பற்றினர்.

இப்பகுதியில் தற்போது ஒரே ஒரு வயல் மட்டுமே அறுவடைக்கு தயாராக இருப்பதாகவும், சில தினங்களாக அந்த வயலில் ஏராளமான மயில்கள் இறங்கி நெல்மணிகளை திண்று வந்ததாக கூறப்பட்டுகின்றது. இந்த நிலையில் மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement