செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படவில்லை.. அச்சம் வேண்டாம் - அரசு நம்பிக்கை..!

Mar 04, 2023 08:22:14 AM

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வட மாநிலங்களில் பரப்பப்படும் வீடியோ போலியானது என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தெரிவித்துள்ளார்...

பீகார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமார், தமிழ்நாட்டில் பணியாற்றும் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக பத்திரிகை செய்திகள் மூலம் அறிந்ததாகவும், இதுதொடர்பாக தமிழ்நாட்டு அதிகாரிகளுடன் பேசி, அங்கு பணியாற்றும் பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டுக் கொண்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் . இதனிடையே தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற 2 வீடியோக்கள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலானது.

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வைரலாகும் வீடியோக்கள் போலியானது என்றும் இது போன்ற வீடியோக்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு புரியும் வகையில் இந்தி மொழியில் தமிழக காவல்துறை அறிவிப்பும் வெளியிட்டது.

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி பகிரப்பட்டு வருவதாகவும் தொழில் அமைதிக்கும் சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர் பெற்று விளங்கும் தமிழ் நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே சென்னை எம்.ஜி.ஆர் செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

வட மாநிலங்களில் பரவும் போலி வீடியோக்களை நம்பி சென்னையில் 16 வருடங்களாக டீக்கடையில் வேலைபார்த்து வந்த தொழிலாளர் ஒருவர் தங்கள் குழுவுடன் சொந்த ஊருக்கு செல்வதாக கூறினார்.

ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் வருகிற மார்ச் மாதம் 8 ந்தேதி கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையில் பங்கேற்க சொந்த ஊருக்கு செல்வதாக தெரிவித்தனர்.

 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement