செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அமைச்சர்களிடம் ரூ 21,000 கேளுங்க பெண்களை தூண்டி விட்ட இ.பி.எஸ்..! பேனா மட்டும் இல்லன்னா... - ஆ.ராசா தூள் பறக்கும் ஈரோடு தேர்தல் களம்

Feb 18, 2023 08:30:06 AM

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெண்களுக்கான உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் என்னவானது ? என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பிய நிலையில் , தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாக ஆ.ராசா தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு வழங்குவதாக சொன்ன 1000 ரூபாய் உரிமை தொகை என்னவானது ? என்று கேள்வி எழுப்பியதோடு , வாக்கு கேட்டு வரும் அமைச்சர்களிடம் மாதத்திற்கு ஆயிரம் வீதம் கடந்த 21 மாதத்திற்கு வரவேண்டிய தொகையான 21 ஆயிரம் ரூபாயை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள், அது உங்கள் பணம் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய திமுக எம்பி ஆ.ராசா, முதல் அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் போது, தேர்தல் வாக்குறுதியில் சொன்ன 100 சதவீத திட்டகளும் நிறைவேற்றப்படும் வகையிலான அறிவிப்பு வர இருப்பதாக தெரிவித்தார்.

ஆ.ராசாவுடன், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோரும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கக வாக்கு சேகரித்தனர்.

அமைச்சர்கள் முத்துச்சாமி ,அன்பில் மகேஷ் , ஈரோடு மதிமுக எம்.பி கணேச மூர்த்தி ஆகியோர் அன்னை சத்யா நகர் பகுதி மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

அந்தப்பகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய திட்டங்கள் வகுத்து தீர்த்துக் கொடுக்கப்படும் என்ற அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார். கே.ஏ.எஸ் நகர் பகுதியில் அமைச்சர் சேகர் பாபு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கள்ளுக்கடை மேடு ராஜாஜி வீதியில் வாக்கு சேகரித்தார். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்துக்காக வந்த அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக , மறுவேடக்கலைஞர்கள் எம்.ஜி.ஆர் பாடலுக்கு உற்சாக நடனமாடினர்.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement