செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காதலில் ஜெயித்தவர் காதலர் தினத்தில் சடலமான சோகம்..! சாதி பார்த்த காதலால் விபரீதம்..!

Feb 16, 2023 10:41:46 AM

காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ஒருவர் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். காதலில் ஜெயித்தவர் காதலர் தினத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடியை சேர்ந்த செல்வம்- வனிதா தம்பதியரின் இரண்டாவது மகள் பிரியங்கா. காரைக்குடி அடுத்த ஆறாவயலில் செயல்பட்டு வந்த பஞ்சுமில்லில் பணியாற்றி வந்த நிலையில் அங்கு தன்னுடன் பணிபுரிந்து வந்த ஆவரங்குடியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தன் தாயிடம் பேசிய பிரியங்கா தன்னை மாமியார் சாதியை சொல்லி திட்டியதாகவும், வரதட்சணையாக நகை பணம் ஏதுவும் கொண்டு வரவில்லை என்றும் தினம் தினம் அவமானப்படுத்தி வருவதாகவும், அதற்கு தனது கணவரும் உடந்தையாக இருப்பதாகவும் கூறி அழுததாக கூறப்படுகின்றது .

அதன் பின்னர் மகளை தொடர்பு கொள்ள இயலாத நிலையில் காதலர் தினத்தன்று மாலையில் பிரியங்கா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

பிரியங்காவின் சடலத்தை மீட்ட காளையார்கோவில் போலீசார் பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் காதல் திருமணம் செய்து காதலனை நம்பி வாழச்சென்ற தனது மகளை சாதி ரீதியாக துன்புறுத்தி இருப்பதால் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அதுவரை தனது மகளின் உடலை வாங்க மறுப்பதாகவும் தாய் வனிதா, சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

காதல் சாதி பார்க்காது.. மதம் பார்க்காது.. இனம் பார்க்காது ஆனால் பணம் மட்டும் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கும் என்பதற்கு மாமியார் வீட்டில் அந்தப்பெண்ணுக்கு நேர்ந்த திருமணம் செய்த வரதட்சணைக் கொடுமையே சான்று..!


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement