செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

4 மாணவிகளும் நீரில் மூழ்கி பலியாக இது தான் காரணம்..! தடுப்பு கம்பி அமைக்க கோரிக்கை

Feb 15, 2023 09:16:15 PM

கரூரில் விளையாட்டுப்போட்டிக்கு சென்ற 4 மாணவிகள் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாயனூர் கதவணையை பார்க்க சென்ற மாணவிகளை, பாறைகள் நிறைந்த பகுதிக்கு ஆசிரியர் குளிக்க அழைத்துச்சென்றது ஏன் ? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை அடுத்த செல்லாண்டியம்மன் கோவில் அருகே காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர் . அதில் 4 மாணவிகள் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கி மாயமாகினர். உடனடியாக அவர்களை காப்பாற்றும் அளவுக்கு நீச்சல் தெரிந்த ஒருவர் கூட அங்கு இல்லாததால் கரையில் இருந்த ஆசிரியர் மற்ற மாணவிகள் உதவி கேட்டு கதறி அழுது கூச்சலிட்டனர்.

அப்பகுதி இளைஞர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கி மாயமான மாணவிகளை தீவிரமாக தேடினர். நீரில் மூழ்கிய இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் 4 மாணவிகளும் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களது சடலங்களை பரிசலில் போட்டு மீட்புக்குழுவினர் கரைக்கு கொண்டு வந்தனர். 4 பேரது சடலங்களும் பிணகூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாதுகாப்பாக அமரவைக்கப்பட்டிருந்த மற்ற மாணவிகள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது

முதற்கட்ட விசாரணையில் பலியான 4 பேரும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த பிளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அரசு நடு நிலைப்பள்ளி மாணவிகள் என்பதும், கரூர் தனியார் கல்லூரியில் நடந்த விளையாட்டுபோட்டியில் பங்கேற்க இரு ஆசிரியர்களுடன் வந்ததும் தெரியவந்தது. கால்பந்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தோல்வி அடைந்த நிலையில் 15 மாணவிகளையும் ஆசிரியர் இப்ராகிம் மற்றும் ஆசிரியை ஆகியோர் மாயனூர் கதவணை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் துறைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது. அங்கு ஆற்றில் சுழல் இருக்கும், புதை மணல் இருக்கும், ஆழமாக இருக்கும் எச்சரிக்கையுடன் குளிக்கவும் என்று பொதுப்பணித்துறை வைத்திருந்த எச்சரிக்கை பலகையை கண்டு கொள்ளாமல் மாணவிகள் அனைவரையும் அங்குள்ள பாறைப்பகுதிகளை ஒட்டிய ஆற்றில் இறக்கி குளிக்க வைத்த போது தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மீட்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என்பது தெரியாமல் காவிரி ஆற்றில் இறங்கி குளித்ததால் வெளிமாவட்டத்தை சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்ததாக தெரிவித்தார். அவர்களது குடும்பத்திற்கு உரிய நிவாரணாம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த பகுதியில் இது போல பலமுறை நடந்திருப்பதாகவும், தற்போது 10 அடி ஆழத்துக்கு தண்ணீர் ஓடுவதால் பெரியவர்கள் எக்காரணத்தை கொண்டும், சிறுவர் சிறுமிகளையோ, நீச்சல் தெரியாதவர்களையோ இந்த பகுதிக்கு குளிக்க அழைத்து வரக்கூடாது என்றும் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதால் தடுப்பு கம்பிகள் அமைத்து இந்த பகுதிக்க மக்கள் செல்வதை நிரந்தராமக் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதே நேரத்தில் இரு ஆசிரியர்களும் எதற்காக மாணவிகளை ஆபத்தான இந்த பகுதிக்கு சின்னஞ்சிறு மாணவிகளி குளிக்க அழைத்துச்சென்றனர் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். இதற்கிடையில், அஜாக்கிரதையாக செயல்பட்ட தலைமையாசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் இப்ராஹிம், ஆசிரியர் திலகவதி ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.


Advertisement
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement