செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கையில் அரிவாளுடன் கொலைவெறியில் நின்றவரை மடக்கிப்பிடித்த காவலர்..! வழக்கறிஞரின் மணிக்கட்டு துண்டானது..!

Feb 15, 2023 04:40:23 PM

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் வழக்கறிஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். கையில் அரிவாளுடன் நின்றவரை பொதுமக்கள் உதவியுடன் போலீஸ்காரர் மடக்கிப்பிடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது..

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் ராமக்கனி, ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகின்றார். இவரது மகன் வழக்கறிஞர் சிவராமகிருஷ்ணன்.

செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் கடையை மூடிக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள் சிவராமகிருஷ்ணனின் தலையில் கம்பியால் அடித்து அரிவாளால் வெட்டினர். அவரின் இடது கையில் வெட்டு பட்டு மணிக்கட்டு துண்டான நிலையில் தப்பி ஓடிய அவர் அருகில் இருந்த மளிக்கைக்கடைக்குள் தஞ்சம் அடைந்தார்.

கையில் அரிவாளுடன் விரட்டிச்சென்ற ஆசாமியை கடைக்குள் நுழைய விடாமல் அங்கிருந்த மக்கள் கையில் கல் மற்றும் கம்புகளால் தாக்குவோம் என்று எச்சரித்து மறித்தனர்

அந்த ஆசாமி அரிவாளுடன் தாக்குதலில் ஈடுபட எத்தனித்ததால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சிங்கிளாக வந்த காவலர் ஒருவர் அரிவாளை கீழே போடச்சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினர். அரிவாளை கீழே போட்டதும், விரைந்து சென்று அரிவாளை காலால் மிதித்து அவனை மடக்கிப்பிடித்தார். பொதுமக்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்தனர்

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த வழக்கறிஞரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரித்தனர்.

அந்நபர் தூத்துக்குடி மாவட்டம் இடைச்சி விளையை சேர்ந்த பிரசாத் என்பது தெரிய வந்தது. தன் தாத்தாவிற்கு சொந்தமான கட்டடத்தை சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமக்கனி அபகரித்து விட்டதாக கூறி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் , தீர்ப்பு வழக்கறிஞரின் தந்தை ராமக்கனிக்கு சாதகமாக வந்ததால் ஆத்திரமடைந்து ராமக்கனியை கொலை செய்ய கூட்டாளி முருகனுடன் வந்ததாகவும் , ராமக்கனி இல்லாததால் சிவராமகிருஷ்ணனை கொல்ல முயன்றதும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement