செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரவுடிகளுக்கு துப்பாக்கியால் வார்னிங் கொடுத்த கோவை போலீஸ்..!

Feb 15, 2023 08:46:12 AM

கோவை நீதிமன்ற வாசல் அருகே நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து அழைத்து வந்த போது வழியில் காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ரவுடி கோகுல் கொலை செய்யப்பட்ட வழக்கில் செல்போன் சிக்னலை வைத்து டிராக் செய்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி குன்னூர் விரைந்தனர்.

இதற்கிடையே கோத்தகிரியில் நடந்த வாகன சோதனையின் போது ஹரி, பரணி செளந்தர், கெளதம், அருண் குமார், ஜோஷ்வா, தேவபிரியன் , சூர்யா ஆகிய 7 பேரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களை தனிப்படை போலீசார் கோவைக்கு அழைத்து வந்தனர்.

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரிக்கு அருகே வந்த போது, வாந்தி வருவது போலவும், இயற்கை உபாதையை கழிக்க வேண்டும் என்றும் ரவுடிகள் தெரிவித்தனர்.

கீழே இறக்கி விட்டதும் தப்பி ஓடிய அவர்கள் புதரில் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் யூசுப் என்பவரை தாக்கியதாகவும், இதையடுத்து தற்காப்புக்காக ரவுடிகள் ஜோஸ்வா, ஒன்ரரை கண் கவுதம் ஆகிய 2 பேரை நோக்கி 4 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டதில் இருவருக்கும் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டு ஓட இயலாமல் சுருண்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

காயம் பட்ட ரவுடிகள் இருவரையும் உடனடியாக அருகில் உள்ள மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது

மற்றவர்களை கோவை அழைத்து வந்த காவல்துறையினர், கொலைக்கான பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விவரித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவையில் ரவுடிகளுக்கும், சட்டம் ஒழுங்கிற்கு கேடு விளைவிப்பவர்களுக்கும் இடம் இல்லை என்று எச்சரித்துள்ளார்.


Advertisement
ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ ஆய்வு..
போலிஸ் அதிகாரி பேசுவதாக கூறி ஓய்வு பெற்ற டிஜிபி மனைவியிடம் ரூ.90 ஆயிரம் மோசடி..
ரயில் நிலைய குற்றங்கள் குறித்து ஆர்.பி.எப் போலீஸ் ஆய்வு.. டாஸ்மாக், பார்களை அகற்ற ரயில்வே பாதுகாப்புபடை கோரிக்கை..
தீபாவளி சீட்டு மோசடி குறித்து புகாரளிக்க வந்தவர்களுக்குள் வாக்குவாதம்..
உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தப்பா ? குமுறும் முதல் பெண் டபேதார்..!
சிமெண்ட் கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..
காருக்குள் குடும்பமே சடலமாக கிடந்த கொடூரம்.. பரபரப்பை கிளப்பிய திகில் சம்பவம்.. நடந்தது என்ன?
"சினிமா நடிகர் துணை முதல்வராகும் போது, வி.சி.க தலைவர் ஆகக்கூடாதா?"
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச மறுவாழ்வு பயிற்சி மையம்... அதிநவீன சிகிச்சைகளுடன் சுயதொழில் செய்யவும் வழிவகை
திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியலில் ரூ. 5.15 கோடி... 2 கிலோ தங்கம், 41 கிலோ வெள்ளி காணிக்கை

Advertisement
Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தப்பா ? குமுறும் முதல் பெண் டபேதார்..!

Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

காருக்குள் குடும்பமே சடலமாக கிடந்த கொடூரம்.. பரபரப்பை கிளப்பிய திகில் சம்பவம்.. நடந்தது என்ன?

Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது


Advertisement