செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நீதிமன்ற வாசல் அருகே ரவுடியை பலியிட்டது ஏன்..? வெளியானது திடுக்கிடும் தகவல்.. நட்புக்காக கத்தியை எடுத்த விபரீதம்..!

Feb 14, 2023 07:37:42 AM

கஞ்சா வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்த பிரபல ரவுடியை நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சரவணம்பட்டி அடுத்த கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் என்கிற சுண்டி கோகுல். கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 7 வழக்குகளில் தொடர்புடைய கோகுல் மீது கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது.

கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக கோகுல் கோவை ஜே.எம் 2 நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகி கையெழுத்திட்டுவிட்டு நீதிமன்றத்தின் பின் வாசல் வழியாக வெளியேறி தனது கூட்டாளியுடன் அங்குள்ள ஒரு கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். அவர்களை பின்தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கோகுலை சுற்றிவளைத்து தலை, கழுத்து,தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி சாய்த்தது.

இதைக் கண்ட அருகில் இருந்த அவரது நண்பரான சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் தடுக்க முற்படவே அவரையும் அரிவாளால் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியானது

கொலையாளிகள் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் சாவகாசமாக நடந்து செல்வதை சிலர் தங்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்தனர்

பட்டப் பகலில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அந்தப் பகுதியில் இருந்தும் இந்த கொலை சம்பவத்தை தடுக்க இயலவில்லை. அதே நேரத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் , மனோஜின் தலையில் வெளியேரிய ரத்தத்தை பொத்திக் கட்டுப்படுத்தினார். வெட்டுப்பட்ட மனோஜோ, தனது கையால் கோகுலின் கழுத்தில் வெளியேறிய ரத்தத்தை தடுத்துக் கொண்டிருந்தார்.

விரைந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கோகுலின் உடலை மீட்ட தோடு, படுகாயங்களுடன் இருந்த அவரது நண்பர் மனோஜையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட கோகுல் கடந்த 2021 ஆம் ஆண்டில் சரவணம்பட்டி அடுத்த உடையாம்பாளையம் பகுதியில் ஸ்ரீராம் என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும் அந்த கொலைக்கு பழிக்கு பழியாக ஸ்ரீராமின் கூட்டாளிகள் பின் தொடர்ந்து வந்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வழக்கமாக நீதிமன்றத்திற்கு ஆஜராக வரும் கோகுல் தனது ஆயுதம் தாங்கிய கூட்டாளிகளுடன் வருவது வழக்கம் என்ற நிலையில் சம்பவத்தன்று ஒரே ஒருவர் மட்டும் உடன் வந்ததால் திட்டமிட்டு இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த கோகுலும் தனது இடுப்பில் பட்டாக்கத்தி வைத்திருந்ததாகவும் சுதாரிப்பதற்குள் கொலையாளிகள் சரமாரியாக வெட்டி சாய்த்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பட்டபகலில் நீதிமன்றத்திற்கு அருகில் எந்த ஒரு பதட்டமுமின்றி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலைக்கார கும்பலை சேர்ந்த ரத்தினபுரி சூர்யா, கவுதம், வெள்ளலூர் உன்னிகிருஷ்ணன், சித்தாபுதூர் கவாஸ்கான், ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement
தீபாவளி சீட்டு மோசடி குறித்து புகாரளிக்க வந்தவர்களுக்குள் வாக்குவாதம்..
உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தப்பா ? குமுறும் முதல் பெண் டபேதார்..!
சிமெண்ட் கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..
காருக்குள் குடும்பமே சடலமாக கிடந்த கொடூரம்.. பரபரப்பை கிளப்பிய திகில் சம்பவம்.. நடந்தது என்ன?
"சினிமா நடிகர் துணை முதல்வராகும் போது, வி.சி.க தலைவர் ஆகக்கூடாதா?"
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச மறுவாழ்வு பயிற்சி மையம்... அதிநவீன சிகிச்சைகளுடன் சுயதொழில் செய்யவும் வழிவகை
திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியலில் ரூ. 5.15 கோடி... 2 கிலோ தங்கம், 41 கிலோ வெள்ளி காணிக்கை
கரூர் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது தீப்பற்றி எரிந்த ஓலா எலக்ட்ரிக் பைக்
புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்ற காரில் கிடந்த 5 பேரின் சடலங்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்
விழுப்புரத்தில் நகைக் கடையில் நூதன முறையில் திருடிவிட்டு தப்பிய 3 பெண்களை போலிசாரிடம் ஒப்படைப்பு

Advertisement
Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தப்பா ? குமுறும் முதல் பெண் டபேதார்..!

Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

காருக்குள் குடும்பமே சடலமாக கிடந்த கொடூரம்.. பரபரப்பை கிளப்பிய திகில் சம்பவம்.. நடந்தது என்ன?

Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது


Advertisement