செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பீகார் இளைஞருக்கு வேலை ரூ.300 மிச்சம்ன்னு நினைச்சார் இப்ப ஒரு உயிர் போச்சே... பருப்பு மில் காவலாளி கொலை..!

Feb 11, 2023 07:21:21 AM

சேலம் பள்ளப்பட்டி பருப்பு மில்லில் 300 ரூபாய் குறைவாக கூலி கேட்ட பீகார் இளைஞர் ஒருவர் வேலைக்கு சேர்ந்த இரண்டே நாட்களில் கல்லா பெட்டியில் கைவைத்த நிலையில், தடுத்த காவலாளியை கொலை செய்த விபரீதம் அரங்கேறி உள்ளது..

சேலம் பள்ளப்பட்டி அடுத்த மணிபுரம் மாருதி பருப்பு மில்லில் பணிபுரிந்த அமானி கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த காவலாளி தங்கையன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கருதிய போலீசார், அவரது சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலத்தை உடற்கூறு செய்த மருத்துவர்கள் காவலாளி தங்கையன் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து, கொலையாளிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம ஆசாமி ஒருவன் சுவர் ஏறிக்குதிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

பருப்பு மில் உரிமையாளர் மாரி என்பவரிடம் விசாரித்தனர். இரு தினங்களுக்கு முன்பாக பீகாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வேலை கேட்டு வந்ததாகவும், மூட்டைகளை ஏற்றி இறக்க வழக்கமாக உள்ளூர் ஆட்கள் 800 ரூபாய் கூலி வாங்கும் நிலையில் அவர்கள் 500 ரூபாய் போதும் என்றதால் 300 ரூபாய் மிச்சமாகும் என்ற நினைப்பில் அதில் ஒருவனிடம் செல்போன் நம்பரை மட்டும் வாங்கிக் கொண்டு குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தியதாக தெரிவித்தார்.

சம்பவத்தன்று அந்த பீகார் இளைஞர் வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்ததால், அந்த இளைஞரின் செல்போன் சிக்னலை வைத்து அவர் சூரமங்கலம் ரயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் விரைந்து சென்று அந்த இளைஞரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமர்ஜித் குமார் என்கிற சோனகுமார் என்ற அந்த இளைஞர் சம்பவத்தன்று சுவர் ஏறிக்குதித்து மில்லுக்குள் நுழைந்து மில்லின் கல்லாப்பெட்டியில் இருந்த ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணத்தை தான் திருடியதாகவும், சத்தம் கேட்டு அங்கு வந்த காவலாளி தங்கையன் தடுத்ததால் அவரை தள்ளிவிட்டு தப்பிச் சென்றதாகவும், அதில் அவர் பலியானதாக சோனகுமார் வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து காவலாளி கொலை வழக்கில் அந்த பீகார் இளைஞரை கைது செய்தனர்.

உள்ளூர் தொழிலாளர்களுக்கு மாற்றாக குறைந்த சம்பளத்துக்காக வட மாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவோர் குறைந்த பட்சம் அந்த நபர்களின் குற்றப்பின்னணியை விசாரிக்கத் தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement