சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, விவசாயி ஒருவரின் மகன் பழைய இருசக்கர வாகனத்தின் உதிரி பாகங்களை பயன்படுத்தி நடவு எந்திரத்தை வடிவமைத்துள்ளார்.
பட்டய படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் தட்சிணாமூர்த்தி, அவ்வப்போது தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளை கவனித்துவருகிறார்.
இருசக்கர வாகனத்தின் உதிரி பாகங்களால், பெட்ரோலில் இயங்கும் நடவு எந்திரத்தை வடிவமைத்த தட்சிணாமூர்த்தி, அதன்மூலம் கம்பு, சோளம், ராகி ஆகியவற்றை நடவு செய்து வருகிறார். இதன் மூலம் டிராக்டர் வாடகை, விவசாயக் கூலி ஆகியவற்றை சேமிக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.