செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நீங்க ரூ.800 க்கு பன்றீங்கோ... நாங்க ரூ.550 க்கு பன்றோம்… தேங்காய் உரிப்பதிலும் போட்டி..! வடக்கால் முடங்கிய உள்ளூர் தொழிலாளர்கள்

Feb 07, 2023 07:39:43 AM

உடுமலை அருகே வட மாநில தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்வதால், தங்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி, தேங்காய் வண்டிகளை மறித்து உள்ளூர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தேங்காய் உரிக்கும் பணிகள் செய்து வருகின்றனர்.

தேங்காய் ஒன்றுக்கு 80 பைசா வீதம் ஆயிரம் தேங்காய் களுக்கு 800 ரூபாய் என்ற கணக்கில் வேலை செய்து வந்த நிலையில் தற்போது தேங்காய் விலை வீழ்ச்சியால் தேங்காய் வியாபாரிகள் முன்பு இருந்த கூலியில் இருந்து பத்து பைசா குறைப்பது என்று முடிவு எடுத்திருந்தனர். கூலி குறைப்பை கண்டித்து உள்ளூர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பல நாட்களாக அதிக அளவில் தேங்காய்கள் தேங்கி கிடப்பதால் வியாபாரிகள் வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு தேங்காய் ஒன்றிற்கு 55 பைசா வீதம் ஆயிரம் தேங்காய் களுக்கு 550 ரூபாய் வீதம் அவர்களுக்கு சம்பளம் வழங்கி பணியில் அமர்த்தப்பட்டனர். இதனால் உள்ளூர் தொழிலாளர்களின் நிலைமை கேள்விக்குறியானது

வட மாநில தொழிலார்கள் உரித்த தேங்காய்களை, தோப்பு உரிமையாளர்கள் வெளியே எடுத்து செல்லாதபடி மறித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை அடுத்த ஆண்டியூர் பகுதியில் தேங்காய் உரிக்கும் பணியில் வெளிமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளுர் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு கொண்டுசெல்வதை யாரும் தடுக்க கூடாது, அவ்வாறு தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வியாபாரிகள் தரப்பில் மனு அளிக்கபட்டது.

இதனிடையே உடுமலை அடுத்த கரட்டுமடம் பகுதியில் தனியார் மண்டபத்தில் வெளிமாநில தொழிலாளர்களை தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபடுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தபட்டது.

தேங்காய் விலை வீழ்ச்சி காரணமாக வெளிமாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி தேங்காய் உரிக்கும் பணியை செய்வதாக வியாபாரிகள் கூறிவந்த நிலையில், ஒருவாரத்திற்கு தேங்காய் பறிக்கும் பணியை நிறுத்திவைக்க முடிவு எடுக்கபட்டுள்ளது.


Advertisement
தமிழகத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் விமானக் கட்டணம் உயர்வு
பெண்ணின் கழுத்தை அறுத்து 30 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொலைகாரர்களுக்கு போலீசார் வலை
கோவையில் மான்கறியை விற்பனை செய்ய முயன்ற 2 பேரும், ரூ 4000 கொடுத்து வாங்க வந்த 3 பேரும் கைது
விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU
அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!
குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்
சாலையில் வழுக்கி விழுந்த சென்னை ஐ.டி பெண் ஊழியர் தலை சிதறி பலியான சோகம்..! சாலைகளை சரி செய்வது எப்போது ?
கஞ்சா போதையில் இருந்த மாணவர்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாளால் வெட்டு... மாணவன் உள்பட 2 பேர் கைது
கோவளத்தில் சி.சி.டி.வி பொருத்தப்பட்டது தெரியாமல் மீன் திருடி விற்பனை செய்து வந்த 2 திருநங்கைகள்
குரூப் - 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

Advertisement
Posted Oct 10, 2024 in இந்தியா,Big Stories,

தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்

Posted Oct 10, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...


Advertisement