ஆவின் நிறுவனம் சார்பில், சேலம் பால் பண்ணையில் 12 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நாளொன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஐஸ்கிரீம் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆலை திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.