செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ

Dec 08, 2022 09:33:00 AM

சினிமா படத்தொகுப்பாளரைகடத்திச்சென்று தாக்கி பணம் பறித்த வழக்கில் தேடப்படும் ஷூ படத்தின் தயாரிப்பாளர் தான் சிங்கப்பூரில் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

யோகிபாபு நடிப்பில் வெளியான ஷூ படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக். இவருக்கும், ஷூ படத்திற்கான ஓடிடி டிஜிட்டல் மற்றும் வெளி மாநில உரிமையை பெற்ற விநியோகஸ்தர் மதுராஜ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்த நிலையில் கார்த்திக்கின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படும் 11 பேர் கொண்ட கும்பல் மதுராஜ் அலுவலகம் சென்று, அங்கிருந்த படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா, ஊழியர் பென்சர் ஆகிய இருவரை கடத்திச்சென்றது. அவர்களை மிரட்டி ஏடிஎம் கார்டை பறித்து பணம் எடுத்ததாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

வினியோகஸ்தர் மதுராஜ் விருகம்பாக்கம் காவல் நிலையம் சென்று கடத்தல் கும்பலை பிடிப்பதற்கும், கடத்தல் கும்பல் காரை பறிமுதல் செய்வதற்கும் உதவியாக இருந்தார். இந்த வழக்கில் வழக்கறிஞர்களான நாகராஜ், வினோத்குமார், கொலை வழக்கில் தொடர்புடைய பாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கார்த்திக்கிற்கும் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று விநியோகஸ்தர் மதுராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதே போல ஷூ பட தயாரிப்பாளர் கார்த்திக், தான் சிங்கப்பூரில் இருப்பதாகவும், தனது வழக்கறிஞர் நாகராஜிடம் தனக்கு மதுராஜ் பணம் தரவேண்டியது குறித்து பேசியதாகவும், அவர் மதுராஜ் அலுவலகம் சென்று மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் கார்த்திக் சிங்கப்பூரில் இருப்பதாக கூறி இருந்தாலும் அவர் உண்மையிலேயே தமிழகத்தில் வேறு எங்காவது பதுங்கி இருக்கிறாரா ? அல்லது வீடியோவில் சொன்னபடி சிங்கப்பூருக்கு தப்பி ஓடிவிட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement