முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் 48 நாட்களில் விசாரணையை முடித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், அவதூறு பரப்பியவருக்கு 17 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.
சமூகவலைத்தளங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறு பரப்பியதாக அரவிந்த் நாகராஜன் என்பவர் மீது சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் முடிந்தால் தன்னை கைது செய்யும் படி அவர் சவால் விட்டிருந்ததை அடுத்து, சென்னை கே.கே நகரைச் சேர்ந்த அரவிந்த்நாகராஜனை அக்டோபர் 12 ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
15 நாட்களில் அவர் மீதான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ததால் விசாரணையை தீவிரப்படுத்திய நீதிமன்றம் 17 நாள் சிறை மற்றும் 6,500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.