செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

புதையல் தங்கத்தை பாதி விலைக்கு தருவதாக ஆசை வார்த்தை... செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட பலே கில்லாடி

Nov 28, 2022 12:09:06 PM

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புதையல் தங்கத்தை பாதிவிலைக்கு தருவதாக நூதன முறையில் ஏமாற்ற முயன்ற நபர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த பாரதி குமார், ஆம்பூர் பஜார் பகுதியில் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று காலை அவரது செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் பேசிய நபர், தான் கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும் விசிட்டிங் கார்டு பிரிண்ட் செய்வது தொடர்பாக உங்களை ஏற்கனவே தொடர்பு கொண்டு பேசி இருப்பதாகவும் கூறி உள்ளார். மேலும் தங்கள் கிராமத்தில் அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், அதற்காக குழி தோண்டியபோது முதியவர் ஒருவருக்கு புதையல் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

புதையல் அனைத்தும் தங்கக் கட்டிகளாக இருப்பதால் அதனை எவ்வாறு விற்பனை செய்வது என தெரியவில்லை எனவும், அதனை உங்களுக்கு பாதி விலையில் கொடுக்கிறோம் என்றும் ஆசையாக கூறியுள்ளார். தாங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து பரிசோதனை மேற்கொண்ட பின்னர் வாங்குவது குறித்து பேரம் பேசிக் கொள்ளலாம் எனவும் பாரதிகுமாரிடம் தெரிவித்துள்ளார்.

பாரதி குமார் தன்னிடம் இப்போது பணம் இல்லை என கூறி மழுப்ப மேலும் சில ஆசை வார்த்தைகளை அந்த நபர் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பாரதி குமார், தன்னுடைய அப்பா காவல்துறை ஆய்வாளராக பணியாற்றுவதாகவும் அவரிடம் தெரிவித்து விட்டு பார்க்க வருவதாக அந்த நபரிடம் கூறியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த அந்த நபர் காவல் துறையில் பணியாற்றுபவர்களை நம்ப வேண்டாம், அவருக்கு தெரிவிக்க வேண்டாம் நீங்கள் வந்து பார்த்து உங்களுக்கு பிடித்ததுக்கு பிறகு தந்தையிடம் கூறலாம் என்றும் அதுவரை இந்த புதையல் குறித்த விவரங்களை வேறு யாரிடம் தெரிவிக்க வேண்டாம் என கூறி செல்போன் இணைப்பை துண்டித்து உள்ளார். இந்த தொலைபேசி உரையாடலை கால் ரெக்கார்டிங் மூலம் பதிவு செய்த பாரதிக்குமார் தனது நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளார். 

இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் செல்போனில் பேசி ஏமாற்ற முயன்ற நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement