செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வரதட்சணைக் கொடுமை… தீக்காயம் அடைந்த மனைவி… உயிரிழப்பு சந்தேகப்பிரிவில் கணவர் கைது

Nov 28, 2022 10:03:54 AM

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் கணவரை கைது செய்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே வழுதாவூரைச் சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் சங்கீதா ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இந்த நிலையில் சங்கீதாவிடம் அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு சங்கீதா மறுப்பு தெரிவித்ததால் கணவர் முத்துக்குமரனும் அவரது அக்கா கலையரசியும் சேர்ந்து, கடந்த 5ஆம் தேதி சங்கீதா வீட்டில் இருந்த போது பின்பக்கமாக அவரது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி, கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் தீக்காயம் அடைந்த சங்கீதா, உடனடியாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சங்கீதாவிடம், நடந்ததை வெளியில் சொல்ல நினைத்தால் உன்னை கொளுத்தியதுபோல, உன் பிள்ளைகளையும் கொளுத்தி விடுவேன் என, முத்துக்குமரன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன சங்கீதா, நடந்த உண்மையை யாரிடமும் வெளியில் சொல்லாமல் மறைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சங்கீதாவிடம், வாக்குமூலம் பெற்ற நீதிபதியிடம், தன் மீது மண்ணெண்ணையை யாரும் ஊற்றி கொளுத்தவில்லை, தானே கொளுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், சங்கீதாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரது காலில் விழுந்து மன்றாடி, கெஞ்சி கூத்தாடி கேட்டபோது, நடந்த உண்மையை அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கண்டமங்கலம் போலீசார் முத்துக்குமரனை கைது செய்து, அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement