விபத்துக்கான இழப்பீடுத் தொகை வழங்காததால் பயணிகளுடன் சென்ற அரசு விரைவுப் பேருந்து, நடுவழியில் நிறுத்தப்பட்டு ஜப்தி செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் ஊ.கொளப்பாக்கத்தைச் சேர்ந்த பச்சமுத்துவின் மாட்டு வண்டியின் மீது அரசுப் பேருந்து, 2015 ஆம் ஆண்டு மோதியதில் 2 மாடுகள் இறந்தன.
எனவே, அவருக்கு நஷ்டஈடாக 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் வழங்க, விருத்தாசலம் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், இழப்பீட்டுத்தொகை வழங்கப்படாததால், திருச்சியிலிருந்து சென்னைக்கு சென்ற அரசு விரைவுப் பேருந்தை, வேப்பூரில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.