செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அசுரன் நிஜ சம்பவம் மகனுக்காக தந்தை ஓட ஓட விரட்டிக் கொலை..! பேனரை கிழித்ததால் வந்த வினை

Nov 14, 2022 02:36:26 PM

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு எதிரே வைக்கப்பட்ட ஒரு தலைவரின் டிஜிட்டல் பேனரை கிழித்த மகனின் வில்லங்க செயலால் , விடுதலை சிறுத்தை பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட விபரீதம் அரங்கேறி இருக்கின்றது.  

தூத்துக்குடி 3 சென்ட் பகுதியை சேர்ந்தவர் கறிக்கடை ஊழியர் மாரிமுத்து. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகராக இருந்தார்.
இவரது மகன் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்

இந்நிலையில் 3 சென்ட் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலை எதிரே கடந்த 30 ந்தேதி அதே பகுதியை சேர்ந்த முகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு தலைவரின் டிஜிட்டல் பேனரை அவரது படத்துடன் வைத்துள்ளனர்.

இந்த டிஜிட்டல் போர்டை மாரிமுத்துவின் மகன் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாரிமுத்து மற்றும் முகேஷின் ஆதரவாளர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் இரு தரப்பையும் அழைத்து சமரசம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முகேஷ் தலைமையிலான கும்பல், விசிக பிரமுகர் மாரிமுத்துவின் வீட்டிற்கு சென்று பயங்கர ஆயுதங்களால் மாரிமுத்துவை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளது. தடுக்க வந்த மாரிமுத்துவின் மகனையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.

இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த படுகொலை தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியகொலை கும்பலை தேடி வருகின்றனர்.

டிஜிட்டல் போர்டை கிழித்ததை காரணம் காட்டி அசுரன் படம் பாணியில் நிகழ்ந்த படுகொலை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, வெட்டிக்கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், கொலையாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் இழப்பிடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement