திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நகை அடகு கடையில் 50லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஞாயிறு அன்று பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வெங்கிலி பேருந்து நிறுத்தம் அருகே, இரு சக்கர வாகனங்களில் சென்ற 5பேரிடம் போலீசார் விசாரித்ததில் நகை கொள்ளை சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 76 சவரன் தங்க நகைகள், 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.