சேலத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் இடைத்தரகர்கள், பெண்கள் பலரை கருமுட்டை விற்க வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் இடைத்தரகர்கள் வளர்மதி, அவரது கணவர் மதியழகன் மற்றும் ஈரோட்டை சேர்ந்த லதா ஆகியோர் பச்சிளம் பெண் குழந்தையை விற்பனை செய்ய கொண்டு வந்தபோது காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக கைது செய்தனர்.
சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தையை 4லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றதாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லதா மற்றும் வளர்மதி இருவரும் 5-ற்கும் மேற்பட்ட பெண்களை கருமுட்டை விற்க வைத்ததுடன், பல்வேறு மாவட்டங்களில் உள்ள குழந்தைகளை விற்பனைக்கு பேரம் பேசியதும் தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவருடன் தகராறு ஏற்பட்டு தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நிறைமாத கற்பனையாக இருந்த அந்த இளம் பெண்ணிற்கு பிரசவவலி ஏற்பட்டு ஈரோடு மாவட்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சிப்பதாக சேலம் மாநகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்ற காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சீலநாயக்கன்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் குழந்தையைக் கொடுத்தபோது அங்கிருந்த காவல்துறையினர் மூவரையும் மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் அவர்களை டவுன் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நாமக்கல் மாவட்டம் தேக்கவாடி பகுதி சேர்ந்த மதியழகன், அவரது மனைவி வளர்மதி, இவர்களது நண்பர் ஈரோட்டைச் சேர்ந்த லதா என்பது தெரியவந்தது.
சட்டவிரோதமாக குழந்தையை 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்தது இடைத்தரகர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லதா மற்றும் வளர்மதி இருவரும் 5-ற்கும் மேற்பட்ட பெண்களை கருமுட்டை விற்க வைத்ததுடன், பல்வேறு மாவட்டங்களில் உள்ள குழந்தைகளை விற்பனைக்கு பேரம் பேசியதும் தெரியவந்தது.
சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்ய முயற்சி, குழந்தை கடத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பெண்கள் உட்பட மூவரையும் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.