சிலை கடத்தல் வழக்கில் கைதான டிஎஸ்பி காதர் பாஷா மீது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, டெல்லி சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய தீனதயாளன் உதவியுடன் சிலைகளை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. காதர் பாஷா மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, டிஐஜி லவ்லி கட்தியார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, முன்னாள் டிஎஸ்பி காதர் பாஷா, சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் மீது 12 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.